Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அடேங்கப்பா, சங்கமித்ராவை நம்பி பாகுபலியை விட பெரிய திட்டம் தீட்டும் சுந்தர் சி.
பாரீஸ்: பாகுபலி தென்னிந்திய படங்களை இந்திய லெவலுக்கு கொண்டு சென்றது. நாங்கள் சங்கமித்ரா மூலம் இந்திய படங்களை உலக லெவலுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம் என இயக்குனர் சுந்தர் சி. தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாஸனை வைத்து சுந்தர் சி. சங்கமித்ரா என்ற மெகா பட்ஜெட் படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்காக ஸ்ருதி லண்டன் சென்று வாள் பயிற்சி எடுத்துள்ளார்.
படத்தில் ஸ்ருதி சங்கமித்ரா என்கிற இளவரசியாக நடிக்கிறார்.
கேன்ஸ்
சங்கமித்ரா படக்குழு பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளது. அந்த நிகழ்ச்சியின்போது சங்கமித்ரா திரைக்கதை புத்தகம் வெளியிடப்பட்டது.
சுந்தர் சி.
படம் குறித்து சுந்தர் சி. கூறும்போது, இந்த படத்தை பண்ணனும் என்பது என் 15 ஆண்டு கால கனவு. 50 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் தான் ஒரே பிரமாண்ட தமிழ் படம் என்றார்.
படம்
ஆயிரத்தில் ஒருவன் படத்தை பார்த்துவிட்டு சங்கமித்ரா குறித்து கனவு காணத் துவங்கினேன். ஆனால் அது அதுக்கு நேரம் வர வேண்டும். முன்பே இந்த படத்தை பண்ணும் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் பெரிய பட்ஜெட், தொழில்நுட்ப எக்ஸ்பர்ட்ஸ், நல்ல தயாரிப்பாளர் தேவைப்பட்டது என்று சுந்தர் சி. தெரிவித்தார்.
தயாரிப்பாளர்
அதிர்ஷ்டவசமாக தேனாண்டாள் ஸ்டுடியோஸின் முரளி எங்களுக்கு கிடைத்தார். அவரிடம் என் ஐடியாவை கூறினேன், தற்போது படம் எடுக்க உள்ளோம். சங்கமித்ராவை உலக ரசிகர்களுக்கான முதல் தமிழ் படமாக எடுக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் சுந்தர் சி.
பாகுபலி
பாகுபலி தென்னிந்திய படங்களை இந்திய லெவலுக்கு கொண்டு சென்றது. நாங்கள் சங்கமித்ரா மூலம் இந்திய படங்களை உலக லெவலுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம் என சுந்தர் சி. கூறியுள்ளார்.