Don't Miss!
- News பம்பரம் இல்லை! துரை வைகோ போட்டியிடுவது தீப்பெட்டியா? கேஸ் சிலிண்டர் சின்னமா?
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Automobiles மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கோடையில் திகில் விருந்து... அடுத்த பேய் பட ரிலீசுக்கு தயாராகும் சுந்தர்.சி
சென்னை : பொழுதுபோக்கு நிறைந்த நகைச்சுவை படங்களை கொடுத்து புகழ் அடைந்தவர் டைரக்டர் சுந்தர்.சி. ஆரம்பத்தில் நகைச்சுவை படங்களை மட்டும் இயக்கிய சுந்தர்.சி, பிறகு ஆக்ஷன் மற்றும் பேய் படங்களை இயக்கி, அதில் வெற்றியும் கண்டார்.
அரண்மனை, அரண்மனை 2 என இரண்டு பேய் படங்களை சுந்தர்.சி தானே இயக்கி, நடித்தார். இந்த இரண்டு படங்களுமே மிகப் பெரிய வெற்றியை பெற்றன. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக அரண்மனை 3 படத்தையும் இயக்கி, அதை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளார் .
வரும் மே மாதத்தில் கோடை விருந்தாக இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அரண்மனை முதல் பாகத்தில் வினய், இரண்டாம் பாகத்தில் சித்தார்த் நடித்ததை போல், மூன்றாம் பாகத்தில் ஆர்யா நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் ராஷி கன்னா, ஆன்டிரியா, சாக்ஷி அகர்வால், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் முக்கிய வேடத்தில் சுந்தர்.சி.,யும் நடித்துள்ளார். இப்படத்திற்கு சி.சத்தியா இசையமைத்துள்ளார்.