திரைத் துளி
கோவை:
மதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் சுந்தர்ராஜன், குள்ளமணி ஆகியோர் குழந்தைகளுக்கு பம்பரம் கொடுத்து பிரச்சாரத்தில்ஈடுபட்டனர்.
கோவை கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் முத்துக்கிருஷ்ணனை ஆதரித்து நடிகர் சுந்தர்ராஜன்பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் அப்போது பேசியதாவது:
ஜெயலலிதாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் இப்போது அதிமுக கூட்டணி வலுவிழந்து விட்டது.அந்த அணி வெற்றி பெற்று யார் முதல்வர் ஆகப் போகிறார்கள்?
எனவே, தற்போது உண்மையான போட்டி அதிமுகவிற்கும், மதிமுகவிற்கும் இடையே தான் நிலவுகிறது. இதில் மதிமுக வெற்றிபெறும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.
இவருடன் நடிகர் குள்ளமணியும் வந்திருந்தார். அவர் பிரச்சார வேனிலிருந்து கீழே இறங்கி குழந்தைகளுக்கு மதிமுக சின்னமானபம்பரங்களை கொடுத்தார்.
Comments


Click it and Unblock the Notifications