Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தினமும் என்னை அடிக்கிறாரு ... சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா 2வது கணவர் மீது புகார்!
சென்னை : சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை ராதா தனது இரண்டாவது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
2013ம் ஆண்டு நடிகை ராதா தொழிலதிபர் பைசூல் மற்றும் அதிமுக பிரமுகர் உள்ளிட்டோர் மீது புகார் அளித்து பரபரப்பை கிளப்பினார்.
ப்பா.. டீப் ஓபன் ஸ்ட்ராப்லெஸ் கவுனில் தாறுமாறாய் கிளாமர் காட்டும் இனியா.. திணறும் இணையம்!
தற்போது இரண்டாவது கணவர் மீது புகார் அளித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
படங்கள் இல்லை
சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் ராதா. இவருக்கு பட வாய்ப்புகள் அமையாததால், அடுத்தடுத்து அவரைப் படங்களில் பார்க்க முடியவில்லை. படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் இவரது பெயர் அடிக்கடி ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
வசந்தராஜா 2வது திருமணம்
நடிகை ராதாவுக்கு ஏற்கனவே தயாரிப்பாளருடன் திருமணமாகி குழந்தை உள்ளது. தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமான கணவரை விவாகரத்து செய்து விட்டு நடிகை ராதா தனியாக வாழ்ந்து வந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா என்பவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
சாலிகிராமத்தில் வாழ்ந்தனர்
வசந்தராஜா எண்ணூர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தை உள்ள நிலையில், நடிகை ராதாவை திருமணம் செய்து கொண்டு சாலிகிராமத்தில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
காவல்நிலையத்தில் புகார்
இந்நிலையில், வசந்தராஜா தன்னை அடித்து துன்புறுத்துவதாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் நடிகை ராதா அளித்துள்ளார் . அதில், நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாகவும், ஹைதராபாத்தில் இருந்து வந்த என் தாயையும் அடிக்க முயற்சி செய்ததாகவும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் எஸ்.ஐ வசந்தராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.