Don't Miss!
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
'அவதூறு புகார் ரொம்ப வேதனையா இருக்கு, முடியலை..' நடிகை சன்னி லியோன் 'வருத்த' விளக்கம்!
திருவனந்தபுரம்: அவதூறான புகார்கள் வேதனை அளிப்பதாக இருப்பதாக நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார், நடிகை சன்னி லியோன். 2012 ஆம் ஆண்டு பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார்.
தளபதி விஜய் ’மாஸ்டர் செல்ஃபி’ எடுத்து ஒரு வருஷமாகிடுச்சு.. டிரெண்டாகும் #1YearOfMasterSelfie
தொடர்ந்து ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ் 2, ஹேட் ஸ்டோரி 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
எக்கச்சக்க ரசிகர்கள்
மலையாளத்தில் மதுரராஜா என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருந்தார். தமிழில், ஜெய், ஸ்வாதி நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்த சன்னி லியோனுக்கு இந்தியா முழுவதும் எக்கச்சக்க ரசிகர்கள். சமூக வலைதளங்களில் வெளியிடும் போட்டோக்களால் எப்போதும் பரபரப்பாகவே இருந்து வருகிறார்.
குடும்பத்துடன் கேரளா
டிவி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்புக்காக சன்னி லியோன், கேரளாவுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்து அவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். இதற்கு லைக்ஸ்களும் கமென்ட்களும் பறக்கின்றன.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்
இந்நிலையில் கேரள மாநிலம் பெரும்பாவூரைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஸ்ரீயாஸ் என்பவர் கேரள டிஜிபியிடம் நடிகை சன்னி லியோன் மீது பண மோசடி புகார் அளித்தார். அதில், 'சன்னி லியோன் கடைத்திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒப்பந்தம் செய்தேன். இதற்காக ரூ.29 லட்சம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தனியார் சொகுசு
2016 ஆம் ஆண்டு முதல் அவருடைய மானேஜருக்கு பல கட்டங்களாகப் பணம் அளிக்கப்பட்டுள்ளது. பணத்தைப் பெற்றுக்கொண்ட சன்னி லியோன், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து கேரள குற்றப்பிரிவு போலீசார், திருவனந்தபுரத்தில் தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் சன்னி லியோனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
புரிந்து கொள்கிறேன்
இந்நிலையில், தனது புகாரை மறுத்துள்ள சன்னி லியோன் கூறியிருப்பதாவது: ஒரு நடிகையாக வேலையை நான் மதிக்கிறேன். அதைத் தவிர வேறொன்றுமில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் எனது கால்ஷீட்டை பலமுறை மாற்ற வேண்டியிருப்பதைப் புரிந்து கொள்கிறேன். ஆனால், அவர்கள் சொன்ன தேதியில் நிகழ்ச்சியை நடத்தமாட்டார்கள்.
சிக்கல் ஏற்பட்டது
நடிகரின் நேரத்தை சொல்லிவிட்டு, அட்வான்ஸ் கூட கொடுக்க மாட்டார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு வருவதாக நான் தேதி கொடுத்திருந்தால் செல்லாமல் இருக்கமாட்டேன். ஆனால், பணம் கொடுக்காததால் கால்ஷீட்டை முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனக்கு மற்ற வேலைகள் இருந்தன.
அவதூறான புகார்
நாங்கள் இரவு பகலாக படப்பிடிப்பில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறோம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் இதுபோன்ற அவதூறான புகார் மற்றும் முறையற்ற நடத்தைகளால் ஆழ்ந்த வேதனை ஏற்படுகிறது. நான் ஏற்கனவே போலீசாரிடம் விளக்கம் அளித்துவிட்டேன். இனி சட்டம் தன் கடமையை செய்யட்டும். இவ்வாறு சன்னிலியோன் கூறியுள்ளார்.