சன்னி பிற ஆண்களுடன் சேர்ந்து நீலப் படத்தில் நடித்ததை பார்த்த கணவர் என்ன செய்தார் தெரியுமா?

By Siva

மும்பை: தான் பிற ஆண்களுடன் சேர்ந்து நீலப் படங்களில் நடித்ததை பார்த்த கணவர் டேனியல் என்ன செய்தார் என்று சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் ஆபாசப் படங்களில் நடித்ததுடன், தயாரித்தும் வந்தவர் சன்னி லியோன். நீலப் பட உலகில் பிரபலமாக இருந்த அவர் தற்போது மும்பையில் செட்டிலாகி பாலிவுட் படங்கள், இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் கணவர் மற்றும் நீலப் படங்கள் குறித்து சன்னி லியோன் கூறியதாவது,

டேனியல் வெபர்

டேனியல் வெபர்

நான் பிற ஆண்களுடன் சேர்ந்து நீலப் படங்களில் நடித்தது என் கணவர் டேனியல் வெபருக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து அவரே என்னுடன் சேர்ந்து நீலப் படங்களில் நடிக்கத் துவங்கினார். அந்த அளவுக்கு அவர் என் மீது அக்கறை வைத்துள்ளார். நான் என்ன செய்தாலும் எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார் டேனியல்.

காதல்

காதல்

என் கணவர் என்னுடன் சேர்ந்து நீலப் படங்களில் பணியாற்றத் துவங்கிய பிறகு நாங்களே தயாரிப்பு நிறுவனம் துவங்கிவிட்டோம். என்னை பார்த்த உடனே காதலில் விழுந்ததாக டேனியல் தெரிவித்தார். ஆனால் எனக்கு அப்படி இல்லை. நான் டேனியல் வசித்து வந்த நியூயார்க் நகருக்கு சென்றபோது அவர் எனக்கு இமெயில் அனுப்பி உன் செல்போன் எண்ணை எனக்கு தர மாட்டாயா? என்று கேட்டிருந்தார்.

நியூயார்க்

நியூயார்க்

செல்போன் எண்ணை கொடுத்ததும், டேட்டிங் போகலாமா என்று டேனியல் கேட்டார். முதல் நாள் டேட்டிங் சென்றபோது நான் லேட்டாக சென்றேன். ஆனால் அவர் பொறுமையாக காத்திருந்தார். நான் அவரை சந்தித்து பேசிய பிறகு எங்களுக்கு இடையேயான ஒற்றுமையை தெரிந்து கொண்டோம்.
உணவகத்தில் நாங்கள் 3 மணிநேரமாக பேசிக் கொண்டிருந்தோம். டேனியலை ஜென்மம் ஜென்மமாக தெரிந்தது போன்று உணர்ந்தேன்.

மோதிரம்

மோதிரம்

பல காலம் ஊர் சுற்றிய பிறகு டேனியல் எனக்கு ப்ரொபோஸ் செய்தார். என் மோதிரத்தை வைக்க ஒரு டப்பாவை தேடியபோது டேனியல் தானே ஒரு டப்பா செய்து வந்து கொடுத்தார். நானும் ஒரு மோதிரம் வைத்திருக்கிறேன் என்று கூறினார். அதை கேட்டு எனக்கு சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் அமைதியாக, எளிமையாக எனக்கு பிடித்த மாதிரியே ப்ரொபோஸ் செய்தார் என்றார் சன்னி.

இரட்டையர்கள்

இரட்டையர்கள்

சன்னி லியோனுக்கும், டேனியல் வெபருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு 2 வயதில் நிஷா என்ற மகளும், நோவா, ஆஷர் என்ற இரட்டையர் மகன்களும் உள்ளனர். 2017ம் ஆண்டு ஜூலை மாதம் லாத்தூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து நிஷாவை தத்தெடுத்தனர். நோவா, ஆஷர் ஆகியோர் வாடகை தாய் மூலம் கடந்த மார்ச் மாதம் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X