Don't Miss!
- News EVM ஓட்டுகளை VVPAT ஸ்லிப் உடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரி வழக்கு: விசாரிக்க மறுத்த சென்னை ஐகோர்ட்
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Lifestyle இந்த முகலாய அரசர் வாழ்க்கை முழுக்க கங்கை நீரை மட்டும்தான் குடிச்சாராம்... அதுக்கான வினோத காரணம் என்ன தெரியுமா?
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கனவு நிறைவேறிடுச்சு... இளையராஜாவுக்காகப் பாடிய சூப்பர் சிங்கர் பிரியங்கா!
Recommended Video
சென்னை : விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்' போட்டியில் கலந்துகொண்டு தனது இனிமையான குரல் வளத்தால் வெற்றி பெற்றவர் பிரியங்கா. பல் மருத்துவம் படித்துவரும் பிரியங்காவுக்கு, பெரிய பின்னணி பாடகியாக வேண்டும் என்பது தான் கனவு.
பிரியங்காவின் கனவு இப்போது நிறைவேறிக் கொண்டிருக்கிறது. பக்தி ஆல்பங்களில் பாடி வந்த பிரியங்கா, அதன் பிறகு கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். இயக்குனர் பாலாவின் கண்ணில் பட்டு சினிமாவிலும் பாடகியானார். 'அவன் இவன்' படத்தில் 'ஒரு மலையோரம்...' என்ற பாடலை விஜய் யேசுதாசுடன் இணைந்து பாடினார் பிரியங்கா.
இளையராஜா இசையில் பாட வேண்டும் என்பது பிரியங்காவின் நீண்ட நாள் கனவாக இருந்தது. அந்த ஆசையும் இப்போது நிறைவேறியிருக்கிறது. இளையாராஜாவின் இசையில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து பாலா படத்திற்காகப் பாடியிருக்கிறார் பிரியங்கா.
A post shared by Priyanka Nk (@priyankank) on
நாச்சியார் படத்தில் இடம்பெறும் 'ஒன்னவிட்டா யாரும் இல்ல எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து' என்று தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார். இந்தப் பாடலை தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியுள்ளார்.
பிரியங்கா திரைப்படப் பின்னணி பாடகியாக வேகமாக வளர்ந்து வருவது குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளார். ரெக்கார்டிங்கின் போது எடுக்கப்பட்ட படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருக்கும் பிரியங்கா தனது கனவு நிறைவேறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.