Don't Miss!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கனவு நிறைவேறிடுச்சு... இளையராஜாவுக்காகப் பாடிய சூப்பர் சிங்கர் பிரியங்கா!
Recommended Video
சென்னை : விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்' போட்டியில் கலந்துகொண்டு தனது இனிமையான குரல் வளத்தால் வெற்றி பெற்றவர் பிரியங்கா. பல் மருத்துவம் படித்துவரும் பிரியங்காவுக்கு, பெரிய பின்னணி பாடகியாக வேண்டும் என்பது தான் கனவு.
பிரியங்காவின் கனவு இப்போது நிறைவேறிக் கொண்டிருக்கிறது. பக்தி ஆல்பங்களில் பாடி வந்த பிரியங்கா, அதன் பிறகு கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். இயக்குனர் பாலாவின் கண்ணில் பட்டு சினிமாவிலும் பாடகியானார். 'அவன் இவன்' படத்தில் 'ஒரு மலையோரம்...' என்ற பாடலை விஜய் யேசுதாசுடன் இணைந்து பாடினார் பிரியங்கா.
இளையராஜா இசையில் பாட வேண்டும் என்பது பிரியங்காவின் நீண்ட நாள் கனவாக இருந்தது. அந்த ஆசையும் இப்போது நிறைவேறியிருக்கிறது. இளையாராஜாவின் இசையில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து பாலா படத்திற்காகப் பாடியிருக்கிறார் பிரியங்கா.
A post shared by Priyanka Nk (@priyankank) on
நாச்சியார் படத்தில் இடம்பெறும் 'ஒன்னவிட்டா யாரும் இல்ல எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து' என்று தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார். இந்தப் பாடலை தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியுள்ளார்.
பிரியங்கா திரைப்படப் பின்னணி பாடகியாக வேகமாக வளர்ந்து வருவது குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளார். ரெக்கார்டிங்கின் போது எடுக்கப்பட்ட படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருக்கும் பிரியங்கா தனது கனவு நிறைவேறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.