Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஜினி வெளியிட்ட… எம்.எஸ்.தோனியின் “அதர்வா: தி ஆரிஜின்’’ கிராஃபிக் நாவல் !
சென்னை : எம்.எஸ் தோனியின் பிரம்மாண்டமான புதிய யுக கிராஃபிக் நாவலான 'அதர்வா: தி ஆரிஜின்'முதல் பிரதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
ரஜினி,ஆஜித், விஜய்,தனுஷ்,சூர்யா போன்ற நடிகர்களுக்கு எந்த அளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு கிரிக்கெட் வீரம் மகேந்திரசிங் தோனிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எம்.எஸ்.தோனி நடித்த புதிய யுக கிராஃபிக் நாவலான 'அதர்வா தி ஆரிஜின்' மாய உலகத்தை உருவாக்க பல ஆண்டுகளாக விடாமுயற்சியுட பணியாற்றியுள்ளனர்.
இந்த கிராஃபிக் நாவலை ரமேஷ் தமிழ்மணி எழுதி, திரு. எம்.வி.எம். வேல் மோகன் தலைமையில், திரு. வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் திரு. அசோக் மேனர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இதில் 150 க்கும் மேற்பட்ட வாழ்க்கைப் படங்கள் உள்ளன.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்ப்பட்ட எம்.எஸ் தோனியின் பிரம்மாண்டமான புதிய யுக கிராஃபிக் நாவலான 'அதர்வா: தி ஆரிஜின்' முதல் பிரதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். இந்த நாவலை Amazon.in தளத்தில் ரசிகர்கள் முன்பதிவு மூலம் ஆர்டர் செய்யலாம் என்று புத்தக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த புத்தகத்தின் விலை ரூ.1499 ஆகும்.
நாவல் குறித்து பேசிய தோனி, உண்மையில் இது ஒரு அற்புதமான முயற்சியாகும். அதர்வா தி ஆரிஜின் ஒரு ஈர்க்கும் கதை மற்றும் அதிவேகமான கலைப்படைப்புகளுடன் கூயி வசீகரிக்கும் கிராஃபிக் நாவலாகும்.இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை சமகாலத் திருப்பத்துடன் வெளியிடும் எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் முயற்சி, ஒவ்வொரு வாசகருக்கும் மேலும் பலவற்றைத் நிச்சயம் தேடித்தரும் என்றார்.