Don't Miss!
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல ஹிட் இயக்குனர்!
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்பொழுது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா நடித்து இருக்க குஷ்பூ,மீனா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் சூரி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
என்ன சொல்றீங்க... அதே தேதியில் ஆர்.ஆர்.ஆர் ரீலிசா? மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !
அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை பிரபல குடும்பப்பட இயக்குனர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அண்ணாத்த
நடிகர் அஜீத் குமாருடன் இணைந்து தொடர்ந்து நான்கு படங்களை இயக்கி வெற்றிகளை குவித்த இயக்குனர் சிறுத்தை சிவா இப்பொழுது சூப்பர் ஸ்டாரை வைத்து அண்ணாத்த என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அனைவரும் விரும்பும் கமர்ஷியல் படங்களை இயக்கி வரும் சிறுத்தை சிவா அண்ணாத்த படத்தையும் அதே பாணியில் இயக்கி வருவதாக கூறப்படுகிறது. சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அப்போது கொரோனா பரவிய சமயத்தில் படக் குழுவில் இருந்த இருவருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டு படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஒரு வழியாக கொரோனா பரவல் குறைந்து வருவதை ஒட்டி மீதமுள்ள காட்சியை ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ளார். ஹைதராபாத்தில் எடுக்க இருந்த சில காட்சிகள் ரஜினிகாந்தின் உடல்நிலையை கருதி சென்னையிலேயே படமாக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் பண்டிகை நாட்களில் அண்ணாத்த படத்தை வெளியிட படக்குழு தயாராக இருக்க தீவிர வேகத்தில் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதில் நடிகை மீனா தனது காட்சிகளுக்கு டப்பிங் செய்து முடித்ததாக அப்டேட்டை வெளியிட்டு இருந்தார். அதேபோல ரஜினிகாந்த் டப்பிங் தொடங்கிய போது ஸ்டூடியோவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகின.
தேசிங் பெரியசாமி
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு மற்றும் மீனா ஆகிய நான்கு நடிகைகள் படத்தில் நடிப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வலம் வந்தன. சென்ற ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி சக்கைபோடு போட்டது. துல்கர் சல்மான், கெளதம் மேனன், ரிது வர்மா,விஜே ரக்ஷன், நிரஞ்சினி அகத்தியன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முதல் படத்திலேயே அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற இயக்குனர் தேசிங் பெரியசாமியை ரஜினிகாந்த் அப்போதே தொலைபேசியில் அழைத்து பேசி பாராட்டுகளை தெரிவித்தது அனைவருக்கும் தெரியம். அப்பொழுது தனக்கு ஒரு கதையை தயார் செய்யும் படியும் தேசிங் பெரியசமியிடம் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டிருந்தார்.
எதற்கும் துணிந்தவன்
எனவே ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை தேசிங் பெரியசாமி இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் அண்ணாத்த படத்தை தொடர்ந்து அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தை குடும்பப் பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப் படுகின்றன. சிவகார்த்திகேயனின் நம்மவீட்டுப்பிள்ளை படத்தைத் தொடர்ந்து இப்போது சூர்யாவின் நடிக்கும் "எதற்கும் துணிந்தவன்" படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதில் சூர்யா ஹீரோவாக நடிக்க கதாநாயகியாக நடிகை ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் நடித்துள்ளார். இப்பொழுது மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு டான் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இதில் சத்யராஜ் மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க இதன் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி இமான் சூர்யா இணைவது இதுவே முதல் முறையாகும்.
பாண்டிராஜ் இயக்கத்தில்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தின் மிரட்டலான இரண்டு ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பியது. அதில் நடிகர் சூர்யா கண்ணில் கொலை வெறியுடன் கையில் அருவாளுடன் நின்று கொண்டு உள்ளார். எதற்கும் துணிந்தவன் படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கும் திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்க அப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. எனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங் பெரியசமி ரஜினிகாந்தை வைத்து இயக்க இருப்பதாக செய்தி வலம் வந்து கொண்டிருக்கும் அதே சமயம் இப்பொழுது பாண்டிராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக மற்றொரு தகவலும் வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இந்த குழப்பத்தைப் போக்க விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.