Don't Miss!
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Finance வீட்டுக்கு ஏசி வாங்க போறிங்களா? ரூ.30,000க்கு கீழ் கிடைக்கும் பிராண்டட் AC-களின் பட்டியல் இதோ!..
- Automobiles பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
முதல்வரிடம் ரூ.50 லட்சம் கொரோனா நிவாரண நிதி அளித்த ரஜினி
சென்னை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகரித்து, நாளுக்கு நாள் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகிறது. பலர் மருத்துவ வசதிகள் இன்று அவதிப்படுகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின், கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி கொள்ள அனைவரும் தாராள நிதி அளிக்கும் படி கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து கோலிவுட் பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்து நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.
ஏற்கனவே நடிகர் சிவக்குமார், டைரக்டர் வெற்றிமாறன், ரஜினியின்மகள் சவுந்தர்யா ஆகியோர் நிதி அளித்துள்ளனர். நடிகர் அஜித் ரூ.25 லட்சம் அளிப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை, ரஜினி இன்று நேரில் சந்தித்தார்.
கொரோனா நிதியுதவி.. தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ. 50 லட்சம்.. விக்ரம் ரூ. 30 லட்சம் நன்கொடை!
அப்போது ரூ.50 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரஜினி வழங்கினார். கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் ஆக்சிஜன், தடுப்பூசி போன்ற மருத்துவ பற்றாக்குறையை போக்க இந்த தொகையை அரசு செலவிட உள்ளது.
Recommended Video
முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, அரசு அமல்படுத்தி உள்ள விதிகளை தமிழ் மக்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும். இந்த கொடிய வைரசில் இரந்து நாம் மீண்டு வர இது ஒன்று தான் வழி என தெரிவித்தார்.