Don't Miss!
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் படத்தை தவறாக சித்தரித்து அவதூறு.. நடிகர் கைது!
சென்னை: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் படத்தை தனது படத்துடன் தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் சாதிக் பாஷா. தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருந்து வருகிறார்.
இவர் மேகி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான இவர், தனது சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் அண்மையில் தனது பேஸ்புக் பக்கத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் படத்துடன் தனது படத்தை இணைத்து வெளியிட்டு தவறாக சித்தரித்து இருக்கிறார்.
இதுகுறித்து அறிந்த மன்னார்குடி பாஜக நகரச் செயலாளர் ரகுராமன் சாதிக் பாஷா மீது போலீஸில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து மன்னார்குடி நகர காவல் துறையினர் சாதிக் பாஷாவை கைது செய்துள்ளனர்.
சாதிக் பாஷாவை 15 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்க மன்னார்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா ஆளுநர் குறித்து நடிகர் ஒருவர் அவதூறாக போட்டோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.