Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
காதலன் கொடுமை தாங்க முடியாமல் விமல் பட நடிகை தற்கொலை
Recommended Video
சென்னை: காதலன் கொடுமை தாங்க முடியாமல் துணை நடிகை யாசிகா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருப்பூரை சேர்ந்தவர் மேரிஷீலா ஜெபராணி என்கிற யாசிகா(21). துணை நடிகை. தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள அவர் விமலின் மன்னர் வகையறா படத்திலும் நடித்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி நடித்து வந்தார் யாசிகா.
யாசிகா
யாசிகாவுக்கும் செல்போன் சர்வீஸ் கடையில் வேலை பார்த்த பெரம்பூரை சேர்ந்த அரவிந்த் என்கிற மோகன்பாபுவுக்கும்(22) காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து திருமணம் செய்யாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே கடந்த 3 நாட்களுக்கு முன்பு மோகன் பாபு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
தற்கொலை
காதலன் பிரிந்து சென்ற சோகத்தில் இருந்த யாசிகா நேற்று முன்தினம் இரவு மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யாசிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்கு
யாசிகாவின் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்கொலை செய்யும் முன்பு யாசிகா தன் அம்மாவுக்கு வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பியது தெரிய வந்துள்ளது.
அம்மா
நம்பி வந்த என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி கொடுமைப்படுத்திய மோகன்பாபுவுக்கு நான் இறந்த பிறகு சரியான தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் அம்மா என்று யாசிகா வாட்ஸ்ஆப்பில் தனது தாய்க்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.