Just In
- 5 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 5 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 6 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 6 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
இந்தியாவில் 16 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- மத்திய அரசு
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஏழாம் அறிவு வரிவிலக்கு விவகாரம்: உதயநிதி மனுவை அனுமதித்தது உச்சநீதிமன்றம்
கேளிக்கை வரிவிலக்கு விவகாரத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு அனுமதித்துள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்த "ஏழாம் அறிவு" திரைப்படத்துக்கு வேண்டுமென்றே அரசியல் உள் நோக்கத்தோடு காலதாமதமாக கேளிக்கை வரிவிலக்கு வழங்கி, வரிவிலக்கின் பயன் அவர்களுக்கு கிடைக்க விடாமல் செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

மேலும், அந்தப் படத்துக்குப் பின்னர் விண்ணப்பித்த பல படங்களுக்கு உடனடியாக வரிவிலக்கு வழங்கி பாரபட்சமாக நடந்து கொண்டதாலும், கேளிக்கை வரிவிலக்கு வழங்க பரிந்துரை செய்யும் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் பற்றி அரசாணைகளில் குறிப்பிடப்படாததாலும், கேளிக்கை வரி விலக்கு அளிக்க தமிழக அரசின் வணிக வரித்துறையால் கொண்டுவரப்பட்ட அரசாணைகளை ரத்துசெய்ய உத்தரவிட வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஒரு படத்துக்கு எவ்வளவு நாட்களில் கேளிக்கை வரிவிலக்கு வழங்கி ஆணையிட வேண்டும் என்று விதிகள் எதுவும் இல்லாத நிலையில், காலநிர்ணயம் செய்து சட்டத்திருத்தம் செய்ய உத்தரவிட முடியாது என்றும், கேளிக்கைவரி விலக்கு வழங்கும் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் திரைப்படத் துறையின் பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாரபட்சமாக நடந்து கொள்வார்கள் என்று கூற இயலாது என்றும் கூறி ரெட் ஜெயன்ட் மூவிஸ் தாக்கல் செய்த மனு உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இது விசாரிக்கப்பட வேண்டிய வழக்கு என்று கூறி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு அனுமதித்து, எதிர்மனுதார்கள் 6 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தமிழில் பெயர் வைத்த படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரிவிலக்கு வழங்க வேண்டும் என்று அரசாணை கூறியுள்ளபோதிலும், அதற்கு எதிராக பாரபட்சமாக செயல்பட்டு "சைக்கிள் கம்பெனி", "ரம்மி" போன்ற பிற மொழிகளில் பெயரிடப்பட்ட படங்களுக்கும் விதிமுறைகளை மீறி வரிவிலக்கு வழங்குமாறு பரிந்துரை செய்ததால் கேளிக்கை வரி விலக்கு குழு உறுப்பினர்கள் பாபு, வி.எஸ். ராகவன், ராஜஸ்ரீ, எல்.ஆர். ஈஸ்வரி, சங்கர் கணேஷ், ஏ.எல். ராகவன், எம். என். ராஜம் ஆகியோரை பதவி நீக்கம் செய்யுமாறு ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.