Don't Miss!
- News மத்திய சென்னையில் ஒரு லட்சம் வாக்குகளை திமுக நீக்கிவிட்டது.. பாஜக வினோஜ் செல்வம் பகீர் குற்றச்சாட்டு
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
பிரபல நடிகை பலாத்கார வழக்கு... நடிகர் திலீப்பிடம் குறுக்கு விசாரணை நடத்த தடை
டெல்லி: நடிகை பலாத்கார வழக்கில், நடிகர் திலீப்பின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த மலையாள முன்னணி நடிகை ஒருவர், கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது. இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் திலீப்பை கைது செய்த போலீசார், கொச்சி ஆலுவா சிறையில் அடைத்தனர். 85 நாட்கள் சிறையில் இருந்த திலீப் பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சிறப்பு விசாரணை
இந்த வழக்கின் சிறப்பு விசாரணை, கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையை 6 மாதங்களில் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீடியோ காட்சி
அதோடு பாலியல் துன்புறுத்தல் வீடியோ காட்சியின் உண்மை தன்மையை, சண்டிகரில் பரிசோதிக்கும் படியும் அது உத்தரவிட்டது.
உண்மைத் தன்மை
இந்நிலையில், அந்த உண்மைத் தன்மை சோதனை அறிக்கை கிடைக்கும் வரையில், சிறப்பு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் நடிகர் திலீப் புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
ஏற்க மறுப்பு
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, நடிகர் திலீப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், இந்த அறிக்கை கிடைக்கும் வரையில் அவரிடம் மட்டும் குறுக்கு விசாரணை நடத்த வேண்டாம் என்று சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.