Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க கீபோர்டில் A and D இடையே உள்ள எழுத்தை மோடி பார்க்கனும்: மா.கம்யூ போராட்டம்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஜியா கான் தற்கொலையில் என் மகனை வில்லனாக்காதீர்கள்- ஆதித்ய பஞ்சோலி
பிரபல நடிகை ஜியா கான் கடந்த 4-ம் தேதி மும்பை ஜூகு பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன் அவர் கடைசியாக தனது நெருங்கிய நண்பரும், நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகனுமான சூரஜ் பஞ்சோலியிடம் நீண்ட நேரம் பேசியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவருக்கும் உள்ள காதல் முறிந்ததால் ஜியா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகின. இதனால் சூரஜ் பஞ்சோலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், தந்தையைப் போல் மகன் என்று சூரஜ் பற்றி கட்டுரையாளர் ஷோபா டே விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள ஆதித்யா பஞ்சோலி, "ஜியா கான் விவகாரத்தில் காரணம் இல்லாமல் என் மகன் சூரஜ் பஞ்சோலியை வில்லன் ஆக்க வேண்டாம். அவர் குற்றம் செய்திருந்தால் அதன்பின்னர் அவரை வில்லன் ஆக்குங்கள்.
ஜியாவும், அவரது தாயாரும் (நடிகை ரபியா அமின்) எங்கள் நண்பர்கள். இந்த சம்பவத்தால் என் மகன் சூரஜ் மிகவும் வேதனை அடைந்துள்ளார். சூரஜ் நன்றாகிவிடுவான் என்பது எனக்குத் தெரியும். ஆனால், ஜியாவின் தாயார் மற்றும் சகோதரிகள் எப்போது இந்த துக்கத்தை மறந்து சாதாரண நிலைக்கு திரும்புவார்களோ? சூரஜின் துக்கத்தைப் பார்க்கும்போது, ஜியாவின் குடும்பத்தினர் படும் துயரம்தான் என் நினைவுக்கு வருகிறது," என்றார்.