twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆம்பள பொம்பளன்னு பார்க்க மாட்டேன்.. வாயில வண்டை வண்டையா வந்துடும்.. உக்கிரமான சுரேஷ் சக்கரவர்த்தி!

    |

    சென்னை: சுசித்ராவுடன் ஏற்பட்ட தக்காளி சண்டையால் உக்கிரமாகிவிட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி.

    நேற்றைய எபிசோடில் வைல்ட் கார்டு என்ட்ரியான சுசித்ரா வந்ததும் சுரேஷ் சக்கரவர்த்தியைதான் நீண்ட நேரம் கட்டிப்பிடித்திருந்தார்.

    அதோடு காயம்பட்ட கமாண்டோவாகி விட்டீர்கள் என்றும் பரிதாபப்பட்டு ஈமோஜியை கொடுத்தார். நீங்கள் பழையப்படி ஃபார்முக்கு வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இப்படி விளையாடுங்க.. சுரேஷுக்கும் ரியோவுக்கும் ஐடியா கொடுத்த சுச்சி.. கடைசியில பேக்ஃபயர் ஆயிடுச்சு! இப்படி விளையாடுங்க.. சுரேஷுக்கும் ரியோவுக்கும் ஐடியா கொடுத்த சுச்சி.. கடைசியில பேக்ஃபயர் ஆயிடுச்சு!

     இருவருக்கும் முட்டிக் கொண்டது

    இருவருக்கும் முட்டிக் கொண்டது

    நேற்றைய எபிசோடின் தொடக்கத்திலும், தன்னை பற்றி கருத்துக்களை சுச்சியிடம் கேட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே இருவருக்கும் முட்டிக் கொண்டது.

     குழகுழ தக்காளி

    குழகுழ தக்காளி

    கிட்சனில் சமையல் செய்து கொண்டிருந்த ரம்யா பாண்டியன், தாத்தா இந்த தக்காளி குழகுழவென இருக்கிறது. இதை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டார்.

     ரூடாக பேசிய சுச்சி

    ரூடாக பேசிய சுச்சி

    அதற்கு சுரேஷ் சக்கரவர்த்தி வை, நான் தொக்கு செய்து தருகிறேன் என்றார். அப்போது அங்கு தக்காளி வெட்டிக் கொண்டிருந்த சுச்சி, இது ரொம்பவே கெட்டுப் போயிருக்கிறது, வந்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் என ரூடாக சொன்னார்.

     சாரி கேட்ட ரம்யா

    சாரி கேட்ட ரம்யா

    அதற்கு ரம்யா கேட்டதற்கு நான் பதில் சொன்னேன். நான் பார்க்கவில்லை என்றார் சுரேஷ். அதற்கு வந்து பார்த்துவிட்டு பேசுங்கள் என ஹார்ஷாக கூறினார் சுச்சி. உடனே ரம்யா பாண்டியன் சாரி தாத்தா என்னால்தான் என வருத்தப்பட்டார்.

     சுச்சி கத்துறது அன்வான்டட்

    சுச்சி கத்துறது அன்வான்டட்

    அப்போதே சுரேஷின் முகம் மாறிவிட்டது. நேராக வீட்டின் கேப்டனான சம்யுக்தாவிடம், நடந்ததை கூறினார். ரம்யா சொன்னதுக்கு நான் பதில் சொன்னேன். அதற்கு அந்த பிள்ளை சுச்சி கத்துறது அன்வான்டட். இது முதல் வார்னிங்.

     வண்ட வண்டயாய் கேட்பேன்

    வண்ட வண்டயாய் கேட்பேன்

    இரண்டாவது வார்னிங் கொடுப்பேன், மூன்றாவது வார்னிங் கொடுப்பேன். அப்புறம் வண்ட வண்டயாய் கேட்பேன்.
    தடுக்க வந்தீங்கன்னா ஆம்பள பொம்பளன்னு பார்க்க மாட்டேன். அப்போ யாரும் கிட்ட வராதீங்க என்றார்.

     காரித் துப்பிய சுரேஷ்

    காரித் துப்பிய சுரேஷ்

    தொடர்ந்து சம்யுக்தாவும், ஷிவானியும் பேசிக் கொண்டிருக்கும் போது, உள்ளே வந்த சுரேஷ், ஷிவானியை காண்பித்து இது என்ன உயிர் இல்லாத
    ஜடமா? இது கம்மாடிட்டியா? கன்டென்ட்டு கொடுக்குறதா இது என காரித்துப்பினார்.

     போட்டுவிட்ட சுரேஷ்

    போட்டுவிட்ட சுரேஷ்

    பின்னர் ஷிவானியிடம், பாலாவுடன் அவரை சேர்த்து வைத்து வெளியே பேசுவதாக சுச்சி கூறியதையும் இதை கன்டென்ட்டாக பார்க்கிறார்கள் என்றும் கூறியதையும் கூறினார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    English summary
    Suresh angered Suchi in Biggboss house. Suchitra also behaved rudely with him in the house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X