செட்டிநாடு ஸ்லாங்கில் பொளந்துக்கட்டிய தாத்தா.. கலக்கல் சமையல்.. ஆனா கப்பு கிடைக்கலேயே பாஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நவராத்திரி கொண்டாட்டமாக நடைபெற்ற டாஸ்க்கில் கிராம வாசியாக இருந்த சுரேஷ் சக்கரவர்த்தி செட்டிநாடு ஸ்லாங்கில் பொளந்துக்கட்டினார்.
பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக பிக்பாஸ் வீட்டில் நவராத்திரி மற்றும் விஜதசமி கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன.
பிக்பாஸ் வீடு தோரணங்களாலும் காகிதப் பூக்களாலும் அலங்காரம் செய்யப்படுள்ளது.

கிராம, நகர வாசிகள்
போட்டியாளர்களின் கை வண்ணத்தில் கொலு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக போட்டியாளர்கள் கிராம வாசிகளாகவும் நகர வாசிகளாகவும் பிரிந்து சமையல் செய்தனர்.

கிராமத்து ஸ்லாங்
ஆட்டம் பாட்டம் என கலக்கினர். மொத்த நிகழ்ச்சியையும் தொகுப்பாளராக இருந்து தொகுத்து வழங்கினார் அனிதா. இதில் கிராம வாசியாக இருந்த சுரேஷ் சக்கரவர்த்தி, செட்டிநாட்டை சேர்ந்தவராக கிராமத்து ஸ்லாங்கில் பொளந்து கட்டினார்.

கப்பு கிடைக்கல
பலரும் டாஸ்க்கில் கிராமத்து ஸ்லாங்கை பேச மறந்த நிலையில் கடைசி வரை அதனை கைவிடாமல் கலக்கினார். ஆனால் அவ்வளவு பாடு பட்டும் வின்னர் கப்பு கிடைக்கவில்லை.

கப்பு கிடைக்கல
பலரும் டாஸ்க்கில் கிராமத்து ஸ்லாங்கை பேச மறந்த நிலையில் கடைசி வரை அதனை கைவிடாமல் கலக்கினார். ஆனால் அவ்வளவு பாடு பட்டும் வின்னர் கப்பு கிடைக்கவில்லை.

நகரவாசிகள் வின்
கேசரியில் சர்க்கரை ஜாஸ்தியாக இருக்கிறது என்று கூறி நகரவாசிகள்தான் வின்னர் என்று தீர்ப்பு சொன்னார் நடுவரான அனிதா சம்பத். இருந்த போதும் நகர வாசிகளான சனம் மற்றும் அவரது குழுவினர் செய்த பாயாசத்தில் வெல்லத்தை வடிகட்டாமல் போட்டதால் மண் இருப்பதாக கூறினார் சுரேஷ் சக்கரவர்த்தி.


Click it and Unblock the Notifications











