Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வேட்பாளராக அறிவிக்கப்படும் சமயத்தில் நிமோனியா பாதிப்பு...சுரேஷ் கோபி மருத்துவமனையில் அனுமதி
கொல்லம் : நடிகரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுரேஷ் கோபி, நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எர்ணாகுணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 4 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுரேஷ் கோபி தற்போது பாப்பன் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். ஜோசி இயக்கும் இப்படத்தின் சூட்டிங் எர்ணாகுளம் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுரேஷ் கோபிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது சுரேஷ் கோபிக்கு ஏற்பட்டிருக்கும் நிமோனியா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடைபெற உள்ள கேரள சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் திருச்சூர் அல்லது திருவனந்தபுரம் தொகுதிகளில் சுரேஷ் கோபி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இந்த சமயத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள், ஆதரவாளர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.