Don't Miss!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- News கன்னியாகுமரி எம்பி தொகுதி: துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
அள்ளி கொடுக்கும் அண்ணன் தம்பி.. கஷ்டப்படும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தலா ரூ.5000 நிதியுதவி!
சென்னை: லாக்டவுன் காரணமாக வறுமையால் வாடும் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு சூர்யா மற்றும் கார்த்தி நிதியுதவி வழங்கி உள்ளனர்.
கொரோனா பரவல் இரண்டாம் அலையில் தமிழ்நாடு மிக மோசமான பாதிப்பை சந்தித்தது.
வட இந்திய பைலட்டுடன் 4வது திருமணம் செய்தாரா வனிதா விஜயகுமார்? தீயாய் பரவும் தகவல்!
35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நாள் தோறும் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர். தற்போது தினசரி பாதிப்பு 20 ஆயிரத்திற்குள் வந்துள்ளது.
தொடரும் லாக்டவுன்
கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து லாக்டவுனை அமல்படுத்தி வருகிறது. சினிமா உள்ளிட்ட ஏகப்பட்ட தொழில்கள் முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளன. சாதாரண மக்கள் பலரும் வேலை இழக்கும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது.
ஒரு கோடி
கொரோனா இரண்டாம் அலை தீவிரத்தை நன்கு உணர்ந்த நடிகர் சூர்யாவின் குடும்பம் முதல் ஆளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாயை கொரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்கினர். சூர்யா குடும்பத்தை தொடர்ந்து மற்ற முன்னணி நடிகர்களும் நிதியுதவி வழங்கினர்.
தலா 5000
தங்களையே நம்பி இருக்கும் ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகளில் மிகவும் கஷ்டப்படும் 250 குடும்பங்களுக்கு தலா 5000 ரூபாயை நடிகர் சூர்யா நேற்று வழங்கி உள்ளார். இதன் மதிப்பு 12.5 லட்சமாகும். சத்தமே இல்லாமல் அவர் செய்த உதவி தற்போது ரசிகர்கள் மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அண்ணனை போலவே தம்பியும்
அண்ணன் சூர்யாவை தொடர்ந்து தம்பி கார்த்தியும் தனது ரசிக மன்றத்தை சேர்ந்த 150 நிர்வாகிகளின் குடும்பத்திற்கு தலா 5000 ரூபாயை வழங்கி உள்ளார். நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியின் இந்த பரந்த மனதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
சூர்யா 40
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 40 படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், வழக்கறிஞராக சூர்யா நடித்து வரும் படம் மற்றும் வெற்றிமாறனின் வாடிவாசல் உள்ளிட்ட படங்களுக்கும் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
ஆகஸ்ட் 6
சூரரைப் போற்று படத்தை அமேசான் பிரைமில் வெளியிட்டு ஒடிடியில் காலடியெடுத்து வைத்த நடிகர் சூர்யா அடுத்ததாக நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள நவரசா ஆந்தாலஜி படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 6ம் தேதி சூர்யாவின் நவரசா நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.