Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மீண்டும் இணையும் கர்ணன் பட கூட்டணி...ஹீரோ யாரு தெரியுமா ?
சென்னை : முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு, மிகப்பெரிய பாராட்டை கர்ணன் படத்திற்காக பெற்றுள்ளார் டைரக்டர் மாரி செல்வராஜ். இந்த படத்தில் தனுஷ், லட்சுமி பிரியா சந்திரமவுலி, நட்டி நடராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வசூலிலும், விமர்சனத்திலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படம் ரிலீஸ் செய்யப்பட்டு இரண்டு நாட்களே ஆகும் நிலையில் இப்படம் தியேட்டரில் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. கார்த்தியின் சுல்தான் படத்திற்கு பிறகு அதிக வசூலை கர்ணன் படம் தான் பெற்று வருகிறது. இதற்காக மாரி செல்வராஜ் மற்றும் தனுஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இப்படி பண்ணலாமா சாந்தனு.. ஸ்ருதிஹாசனின் அந்த வீடியோவை பப்ளிக் பண்ண காதலர்.. செம வைரல்!
மீண்டும் கைகோர்க்கும் கர்ணன் டீம்
இந்நிலையில் கர்ணன் பட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு, டைரக்டர் மாரி செல்வராஜுடன் மற்றொரு படத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார் என்ற தகவல் கோலிவுட்டில் தீயாய் பரவி வருகிறது. இந்த படத்தில் ஹீரோவாக சூர்யா நடிக்க உள்ளாராம். 2022 ம் ஆண்டின் மத்தியில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிஸியான மாரிசெல்வராஜ், சூர்யா
மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை ஹீரோவாக வைத்து, விளையாட்டை மையமாகக் கொண்ட வாழ்க்கை படம் ஒன்றை எடுக்கும் வேலைகளை துவக்கி விட்டார். இந்த படத்தை டைரக்டர் பா.ரஞ்சித் தான் தயாரிக்க உள்ளார். அதே சமயம் சூர்யாவும் நவரசா படத்தை முடித்த பிறகு, பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
சூர்யா கையில் பல படங்கள்
ஞானவேல் இயக்கும், பெயரிடப்படாத இந்த படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இதற்கிடையில் பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் ஆகிய படங்களிலும் தற்போது சூர்யா நடித்து வருகிறார்.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில் சூர்யா - மாரி செல்வராஜ் இணையும் படம் பற்றிய தகவல் வெளியானதால் சூர்யா ரசிகர்களும், மாரி செல்வராஜின் ரசிகர்களும் அதை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இருவரும் தற்போது கமிட் ஆகி இரக்கும் படங்களை முடித்த பிறகே இந்த புதிய படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.