Don't Miss!
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
முத்தையாவை தேர்வு செய்த சூர்யா: அப்போ ரஞ்சித் அவரிடம் போவாரோ?
சென்னை: ரஞ்சித்தை காக்க வைத்துவிட்டு முத்தையாவின் படத்தில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளாராம் சூர்யா.
சூர்யா ஹரி இயக்கத்தில் எஸ்.3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு அவரை வைத்து படம் எடுக்க முத்தையாவும், பா. ரஞ்சித்தும் விரும்பினர். இருவருமே சூர்யாவை சந்தித்து ஒரு வரியில் கதை சொல்லியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஹரியின் படத்தை முடித்த பிறகு கொம்பன் புகழ் முத்தையாவின் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் சூர்யா. அடுத்த ஆண்டு ரஞ்சித்துக்கு கால்ஷீட் கொடுக்கிறாராம் சூர்யா.
முத்தையாவின் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளாராம். முத்தையா சூர்யாவுக்காக நல்ல குடும்பக் கதையாக தயார் செய்து வைத்துள்ளாராம். ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இளைய தளபதி விஜய் ஆசையாக உள்ளார்.
ஒரு வேளை இந்த கேப்பில் ரஞ்சித் விஜய்யை இயக்க சென்றுவிடுவாரோ?