Don't Miss!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'சொடக்கு' பாட்டு போடாததால் பஸ் கண்ணாடியை உடைத்த சூர்யா ரசிகர்கள்!
Recommended Video
விருதுநகர் : சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்ற 'சொடக்கு மேல சொடக்கு' பாடலை போடாததால் பஸ் கண்ணாடியை உடைத்துள்ளனர் சூர்யா ரசிகர்கள்.
பஸ் கண்ணாடியை உடைத்து, ஓட்டுநரையும் நடத்துநரையும் தாக்கிய கல்லூரி மாணவர்கள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாகி வருகிறது.
சூர்யா
நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் குறைவான வசூலை மட்டுமே பெற்றதாகக் கூறப்படுகிறது.
கல்லூரி மாணவர்கள்
விருதுநகர் மொட்டமலையில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து ஒரு தனியார் பேருந்தில் பயணித்து கல்லூரிக்குச் செல்வது வழக்கம்.
சூர்யா ரசிகர்கள்
இந்நிலையில் கல்லூரிக்கு பேருந்தில் பயணம் செய்த சூர்யா ரசிகர்கள் சிலர் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் வரும் "சொடக்கு மேல சொடக்கு போடுது" பாடலை போடும்படி பேருந்து ஓட்டுனரிடம் கேட்டுள்ளனர்.
சொடக்கு பாடல் போடாததால்
அந்தப் பாடலைப் போட ஓட்டுநர் மறுத்ததால் மாணவர்கள், பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளனர். ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் சூர்யா ரசிகர்களால் தாக்கப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவர்களான அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது பற்றி தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.