Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சூர்யாவின் அடுத்த பவர்ஃபுல் கேமியோ ரோல்..ஷங்கரின் RC15 அப்டேட்!
சென்னை : பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் ராம்சரணின் RC15 படத்தில் கேமியோ ரோலில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராம்சரணுக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். அரவிந்த் சாமி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அஞ்சலி, ஜெயராம், நவீன் சந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர்.
தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
ரன்வீர் சிங் பேன்ட்டை மீண்டும் கழட்டத் துடிக்கும் பீட்டா.. ஓகே சொல்வாரா அந்த நேக்கட் ஹீரோ!
ராம்சரண்
எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் நடித்திருந்தனர். மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்த ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு ராம்சரண் ஷங்கர் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர்களின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. காரணம், அவர்கள் நடிக்கும் படங்கள் தற்போது இந்திய அளவில் பான் இந்திய படங்களாக வெளியிடப்படுகின்றன.
RC15
ராம்சரணின் 15 திரைப்படமான இப்படத்திற்கு தற்காலிகமாக RC15 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இப்படத்தில் ராம் சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்திருப்பதாகவும். நடுத்தர வயது முதல் வயதானவர் வரை பல கெட்டப்புகளில் ராம்சரண் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கேமியோ ரோலில்
இந்நிலையில், இத்திரைப்படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் கடைசி ஐந்து நிமிடத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், RC 15 படத்தில் மற்றுமொரு பவர்புல் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த தகவலால் சூர்யாவின் இந்த படத்தை எதிர்பார்த்துள்ளனர்.
பிரம்மாண்ட சண்டை காட்சி
மேலும், மாநாடு படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த எஸ்.ஜே சூர்யாவிடம் வில்லன் கதாபாத்திரம் குறித்து பேசியிருப்பதாகவும் அதற்கு அவர் ஓகே சொன்னதாகவும் கோலிவுட் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தில் 60% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் எஞ்சிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் 1000 பேருடன் ராம்சரண், கியாரா நடனமாட ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாகவும். ஒரு பிரம்மாண்ட சண்டைக் காட்சியைப் படமாக்க உள்ளார்களாம். அந்த சண்டைக்காட்சிக்கு மட்டும் 1200 ஸ்டன்ட் நடிகர்களை நடிக்க வைக்கப் போவதாக கூறப்படுகிறது.