ஜோதிகாவுக்கு விருப்பமில்லை.. சூர்யாதான் கட்டாயப்படுத்தினார்.. வெளியான டாப் சீக்ரெட்

சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா - ஜோதிகா. காதலித்து பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். ஜோதிகாவுக்கும் சூர்யா ரொம்பவே சப்போர்ட்டாக இருந்துவருகிறார்.இந்தச் சூழலில் பாலிவுட்டில் விரைவில் வெளியாகவிருக்கும் ஸ்ரீகாந்த் என்ற படத்தில் ஜோதிகா நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் இயக்குநர் அளித்திருக்கும் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

சூர்யா தமிழின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவர். நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமான அவர் இதுவரை 41 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் ரிலீஸானது. படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் அனைத்துமே சமூக பொறுப்பாக இருக்கிறது என்று பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்துவிட்டு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் கமிட்டானார். முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து இரண்டாவது ஷெட்யூலில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் அப்படத்திலிருந்து விலகினார் சூர்யா. அதனையடுத்து சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார். ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்கிறார்.

Suriya is the only reason Jyothika acted in Srikanth Movie

மெகா பட்ஜெட்: கங்குவா திரைப்படம் பல மொழிகளில் உருவாகிறது. 3டி தொழில்நுட்பத்திலும் வெளியாகவிருக்கும் படத்தில் திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக அமைந்திருக்கிறது. பீரியட் கால படமாகவும் தற்காலத்தில் நடக்கும் படமாகவும் கங்குவா உருவாகிறது. படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

சிறந்த கணவர்: சூர்யாவை பொறுத்தவரை நல்ல நடிகர் என்பதோடு மட்டுமின்றி சிறந்த கணவராகவும் திகழ்கிறார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தபோது ஜோதிகாவுடன் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. திருமணத்துக்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார்.

சூர்யா ஒரு சிறந்த கணவர். தனக்கு எல்லா விதத்திலும் மதிப்பு கொடுக்கிறார். நான் மீண்டும் நடிப்பதற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தவரே சூர்யாதான் என பல மேடைகளில் ஜோதிகா புகழ்ந்திருக்கிறார். ஜோதிகா கடைசியாக ஷைத்தான் என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முன்னதாக ஜோதிகா சொன்னதுபோல் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பதற்கு சூர்யா தனது முழு ஆதரவையும் கொடுத்துவருகிறார். மும்பையில் தற்போது இருவரும் தங்களது குழந்தைகளுடன் வசித்துவருகிறார்கள்.

இயக்குஅந்ர் பேட்டி: ஜோதிகா இப்போது ஸ்ரீகாந்த் என்ற படத்தில் நடித்திருக்கிறார். மாற்றுத்திறனாளி தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பெல்லா என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் ஜோதிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அந்தப் படத்தின் இயக்குநர் துஷார் ஹிராநந்தினி ஜோதிகா குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

சூர்யார்தான் காரணம்: அந்தப் பேட்டியில் பேசிய அவர், 'ஜோதிகா மிகச்சிறந்த நடிகை. ஸ்ரீகாந்த் படத்தில் நடிப்பதற்கு அவருக்கு முதலில் விருப்பமே இல்லை. ஆனால் சூர்யா இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட்டை படித்தார். படித்த பிறகு ஜோதிகாவிடம், இந்தப் படத்தில் நீ நடித்தே ஆக வேண்டும் என்று கூறினார். அதன் பின்னர்தான் ஜோதிகா ஸ்ரீகாந்த் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார்' என்றார். முன்னதாக கில்லி படத்தில் ஜோதிகா நடிக்கவிருந்ததும்; சூர்யா கேட்டுக்கொண்டதற்காக அந்தப் படத்திலிருந்து விலகியதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X