Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நான் பப்ளிசிட்டி தேடுறேனா?: பீட்டாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சூர்யா #Jallikattu
சென்னை: சி3 படத்திற்கு விளம்பரம் தேட ஜல்லிக்கட்டை ஆதரிப்பதாக விமர்சித்ததற்கு மன்னிப்பு கேட்கக் கோரி நடிகர் சூர்யா பீட்டா அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். ஜல்லிக்கட்டுக்காக போராடும் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து தனது சி3 படத்தின் மதுரை மற்றும் நெல்லை விளம்பர நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்.
இந்நிலையில் சூர்யா சி3 படத்திற்கு விளம்பரம் தேடவே ஜல்லிக்கட்டை ஆதரிப்பதாக பீட்டா இந்தியா அமைப்பு தெரிவித்தது. இதை பார்த்த சூர்யா ரசிகர்கள் கொந்தளித்து பீட்டா அமைப்பை சமூக வலைதளங்களில் விளாசிவிட்டனர்.
தன்னை விமர்சித்த பீட்டா அமைப்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கக் கோரி சூர்யா நோட்டீஸ் அனுப்புயிள்ளார். சூர்யா சார்பில் அவரது வழக்கறிஞர் விஜய் ஆனந்த் நோட்டீஸை அனுப்பி வைத்துள்ளார்.
பீட்டா அமைப்பு 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.