இது இனி என் குடும்பம்: உயிர் இழந்த ரசிகரின் குடும்ப பொறுப்பை ஏற்ற சூர்யா

By Siva

Recommended Video

உயிர் இழந்த ரசிகரின் குடும்ப பொறுப்பை ஏற்ற சூர்யா- வைரல் வீடியோ

சேலம்: உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

சூர்யாவும் சரி, கார்த்தியும் சரி ரசிகர்கள் மீது தனிப்பாசம் வைத்துள்ளனர். ரசிகர்களின் வீட்டில் ஏதாவது துக்க சம்பவம் நடந்தால் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துவிட்டு வேலையை பார்க்கும் ஆட்கள் அவர்கள் இல்லை.

நேரில் சென்று ஆறுதல் கூறுவதுடன் தங்களால் முயன்ற உதவியையும் செய்து வருகின்றனர்.

ரசிகர்

ரசிகர்

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மணிகண்டன்(35) என்பவர் டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். சூர்யா ரசிகர் மன்றத்தின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த அவர் நுரையீரல் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 13ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

சூர்யா

சூர்யா

மணிகண்டன் மரணம் அடைந்தது குறித்து அறிந்த சூர்யா அவரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற சேலத்திற்கு தனியாக காரில் சென்றார். பகலில் சென்றால் கூட்டம் கூடிவிடும் என்பதால் இரவு 10 மணி போன்று மணிகண்டன் வீட்டிற்கு சென்றார். மணிகண்டனின் மகளின் படிப்பு செலவை ஏற்ற சூர்யா இந்த குடும்பம் இனி என் குடும்பம், உங்களின் தேவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

எதிர்காலம்

எதிர்காலம்

மணிகண்டனை இழந்துவிட்டு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு இனி என்ன செய்யப் போகிறோம் என்று கவலையில் இருந்த அவரின் மனைவிக்கு சூர்யாவின் வாக்குறுதி நம்பிக்கை அளித்துள்ளது. சூர்யாவின் இந்த செயல் அவர் ரசிகர்கள் மட்டும் அல்ல பிற நடிகர்களின் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

ட்விட்டர்

சூர்யா மணிகண்டனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியபோது எடுத்த வீடியோவை அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X