Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இது இனி என் குடும்பம்: உயிர் இழந்த ரசிகரின் குடும்ப பொறுப்பை ஏற்ற சூர்யா
Recommended Video
சேலம்: உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் சூர்யா.
சூர்யாவும் சரி, கார்த்தியும் சரி ரசிகர்கள் மீது தனிப்பாசம் வைத்துள்ளனர். ரசிகர்களின் வீட்டில் ஏதாவது துக்க சம்பவம் நடந்தால் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துவிட்டு வேலையை பார்க்கும் ஆட்கள் அவர்கள் இல்லை.
நேரில் சென்று ஆறுதல் கூறுவதுடன் தங்களால் முயன்ற உதவியையும் செய்து வருகின்றனர்.
ஜீரோ ஷூட்டிங்கில் தீவிபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஷாரூக்!
ரசிகர்
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மணிகண்டன்(35) என்பவர் டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். சூர்யா ரசிகர் மன்றத்தின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த அவர் நுரையீரல் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 13ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
சூர்யா
மணிகண்டன் மரணம் அடைந்தது குறித்து அறிந்த சூர்யா அவரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற சேலத்திற்கு தனியாக காரில் சென்றார். பகலில் சென்றால் கூட்டம் கூடிவிடும் என்பதால் இரவு 10 மணி போன்று மணிகண்டன் வீட்டிற்கு சென்றார். மணிகண்டனின் மகளின் படிப்பு செலவை ஏற்ற சூர்யா இந்த குடும்பம் இனி என் குடும்பம், உங்களின் தேவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
எதிர்காலம்
மணிகண்டனை இழந்துவிட்டு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு இனி என்ன செய்யப் போகிறோம் என்று கவலையில் இருந்த அவரின் மனைவிக்கு சூர்யாவின் வாக்குறுதி நம்பிக்கை அளித்துள்ளது. சூர்யாவின் இந்த செயல் அவர் ரசிகர்கள் மட்டும் அல்ல பிற நடிகர்களின் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
|
ட்விட்டர்
சூர்யா மணிகண்டனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியபோது எடுத்த வீடியோவை அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.