Don't Miss!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- News வெள்ள பாதிப்பிலிருந்து மீளாத துபாய்.. இரண்டாவது நாளாக இன்றும் சென்னை டூ UAE விமானங்கள் ரத்து!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இது இனி என் குடும்பம்: உயிர் இழந்த ரசிகரின் குடும்ப பொறுப்பை ஏற்ற சூர்யா
Recommended Video
சேலம்: உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் சூர்யா.
சூர்யாவும் சரி, கார்த்தியும் சரி ரசிகர்கள் மீது தனிப்பாசம் வைத்துள்ளனர். ரசிகர்களின் வீட்டில் ஏதாவது துக்க சம்பவம் நடந்தால் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துவிட்டு வேலையை பார்க்கும் ஆட்கள் அவர்கள் இல்லை.
நேரில் சென்று ஆறுதல் கூறுவதுடன் தங்களால் முயன்ற உதவியையும் செய்து வருகின்றனர்.
ஜீரோ ஷூட்டிங்கில் தீவிபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஷாரூக்!
ரசிகர்
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மணிகண்டன்(35) என்பவர் டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். சூர்யா ரசிகர் மன்றத்தின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த அவர் நுரையீரல் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 13ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
சூர்யா
மணிகண்டன் மரணம் அடைந்தது குறித்து அறிந்த சூர்யா அவரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற சேலத்திற்கு தனியாக காரில் சென்றார். பகலில் சென்றால் கூட்டம் கூடிவிடும் என்பதால் இரவு 10 மணி போன்று மணிகண்டன் வீட்டிற்கு சென்றார். மணிகண்டனின் மகளின் படிப்பு செலவை ஏற்ற சூர்யா இந்த குடும்பம் இனி என் குடும்பம், உங்களின் தேவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
எதிர்காலம்
மணிகண்டனை இழந்துவிட்டு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு இனி என்ன செய்யப் போகிறோம் என்று கவலையில் இருந்த அவரின் மனைவிக்கு சூர்யாவின் வாக்குறுதி நம்பிக்கை அளித்துள்ளது. சூர்யாவின் இந்த செயல் அவர் ரசிகர்கள் மட்டும் அல்ல பிற நடிகர்களின் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
|
ட்விட்டர்
சூர்யா மணிகண்டனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியபோது எடுத்த வீடியோவை அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.