Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வணங்கான் படத்தில் சூர்யாவின் கேரக்டர் இது தான்… கூடவே ஷூட்டிங் அப்டேட்டும் கொடுத்த பிரபலம்
சென்னை: 19 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா, பாலா கூட்டணியில் உருவாகி வரும் படம் 'வணங்கான்.'
இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கிருத்தி ஷெட்டி நடித்து வருகிறார்.
'வணங்கான்' படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரியில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கிடைப்பில் உள்ளது.
பாலிவுட் நடிகருடன் காபி குடிக்க விருப்பம் தெரிவித்த சூர்யா.. எதுக்காக தெரியுமா?
சூர்யா – பாலா கூட்டணி
ஆரம்ப காலங்களில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்தார் சூர்யா. அப்போது 'நந்தா' படத்தில் சூர்யாவை ஹீரோவாக்கி, அவருக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்தார் டைரக்டர் பாலா. அன்று முதல் பாலா - சூர்யா இருவரின் நட்பு தொடர்ந்து வருகிறது. நந்தா படத்தை தொடர்ந்து பிதாமகன் படத்திலும் இணைந்த இந்தக் கூட்டணி, அதன்பிறகு இணையவில்லை. பிதாமகன் படத்தில் சூர்யாவுடன் விக்ரமும் லீட் ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
19 ஆண்டுகளுக்குப் பின் வணங்கான்
நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து சூர்யா, பாலா கூட்டணி இணையும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாலா இயக்கிய 'அவன் இவன்' படத்தில், சிறிய கேமியோ ரோலில் மட்டும் வந்துபோனார் சூர்யா. இந்நிலையில், 19 வருட இடைவேளைக்குப் பிறகு இருவரும் 'வணங்கான்' படத்தில் இணைந்துள்ளனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு, கன்னியாகுமரியில் நடைபெற்றது. சூர்யா ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
முடங்கிய வணங்கான் சூட்டிங்
முதற்கட்ட படப்பிடிப்பு பிரச்சினை இல்லாமல் நடந்து முடிந்த நிலையில், சூட்டிங் ஸ்பாட்டில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே பிரச்சினை என்று தகவல் வெளியானது. இதனால் வணங்கான் படம் டிராப் ஆகிவிட்டதாக செய்திகள் வர, அது வதந்தி என கூறும் விதமாக சூர்யாவும் ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில், வணங்கான் படத்தின் கதையில் பாலா சில மாற்றங்கள் செய்துவருவதாகவும் சொல்லப்பட்டது. இதனிடையே சூர்யாவும் சிவா இயக்கும் 'சூர்யா 42' படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார்.
ஷீகான் ஹூசைனி விளக்கம்
இந்நிலையில், வணங்கான் படத்தில் நடித்து வரும் பிரபல கராத்தே மாஸ்டர் ஷீகான் ஹூசைனி, ஷூட்டிங் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "வணங்கான் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் புதிய தோற்றத்தில் நடிக்க உள்ளதால் அதற்காக தயாராகி வருகிறேன். மேலும் எப்போது வேண்டுமானாலும் வணங்கான் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கலாம். இந்தப் படத்தில் சூர்யா மீனவராக நடிக்கிறார்" என்றும் ஷீகான் ஹூசைனி கூறியுள்ளார். இதனால் சூர்யா - பாலா ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.