twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அக்டோபரில் சூர்யா திருமணம்

    By Staff
    |

    சூர்யாவின் திருமணம் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் என அவரது தந்தையும்நடிகருமான சிவக்குமார் அறிவித்துள்ளார்.

    இருப்பினும் பெண் யார் என்பதை அவர் சொல்ல மறுத்து விட்டார்.

    நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். இதைசிவக்குமார் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ஜோதிகாவை மணப்பதில்சூர்யா தீவிரமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

    இடையில், ஜோதிகாவை போனில் கூப்பிட்டு சிவக்குமார் கடுமையாகதிட்டியதாகவும், இதை அழுதுகொண்டே சூர்யாவிடம் ஜோதிகா தெரிவித்ததாகவும்,அவரை சமாதானப்படுத்தி மும்பையில் கொண்டு போய் சூர்யா விட்டு விட்டு வந்தார்என்றும் செய்திகள் வந்தன.

    இந் நிலையில், சூர்யாவின் திருமணம் எப்போது நடைபெறும் என்பதை முதல்முறையாக சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், சூர்யாவின் திருமணம் அக்டோபர்மாதம் நடைபெறும் என்றார். பெண் யார் என்று கேட்டபோது அவர் பதில் ஏதும்தரவில்லை. இதனால் சூர்யாவை மணக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்புஎகிறியுள்ளது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X