Don't Miss!
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
எஞ்சியுள்ள இறுதிகட்ட பணிகள்.. மீண்டும் தொடங்கவுள்ள #சூர்யா40 படப்பிடிப்பு!
சென்னை: இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 40வது படத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படவில்லை என்பதால் #சூர்யா40 என அழைக்கின்றனர்.
சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இம்மாதம் தொடங்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூர்யா 40 பற்றி அடுத்தடுத்த அப்டேட்...டைட்டிலில் சஸ்பென்ஸ் வைத்து அசத்தும் பாண்டிராஜ்
கொரோனா தொற்று
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 40வது படத்தில் நடிக்கிறார். இன்னும் 2 வார படப்பிடிப்பு மட்டுமே மிச்சம் உள்ளதாக சொல்லபட்ட நிலையில் படக்குழு கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு படப்பிடிப்பை நிறுத்தியது. ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என முன்னரே கூறப்பட்டது.
வைரலான படங்கள்
இதற்கிடையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் #சூர்யா40 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டது. சூர்யா வாளுடன் உள்ள புகைப்படம் & துப்பாக்கி உடன் உள்ள புகைப்படம் என வெளியான 2 புகைப்படங்களும் வைரலானது.
Recommended Video
நாட்டை உலுக்கியது
அதனை தொடர்ந்து அண்மையில் #சூர்யா40 படத்தின் கதை குறித்து சில தகவல்கள் கசிந்தன. 2019ம் ஆண்டு பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. அதனை மையமாக வைத்தே #சூர்யா40 படத்தின் கதை தயாராகியுள்ளது என பேசப்பட்டது.
படப்பிடிப்பு தொடக்கம்
கொரோனா இரண்டாம் அலை காரணமாக நின்று போன படப்பிடிப்பு பணிகள் தற்போது மெல்ல மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளன. அதன் படி மீதமுள்ள #சூர்யா40 படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை 12ம் தேதி தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.