Don't Miss!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
மீண்டும் தொடங்கும் சூர்யா 40 படப்பிடிப்பு... எப்போது தெரியுமா!
சென்னை : நடிகர் சூர்யா இப்பொழுது பாண்டிராஜ் இயக்கத்தில் தன்னுடைய 40வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கி வருவதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு இப்பொழுது மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் பாண்டிராஜ்
அனைத்து தரப்பு மக்களும் ரசிக்க கூடிய வகையில் தொடர்ந்து படங்களை இயக்கி வெற்றி கண்டு வரும் இயக்குனர் பாண்டிராஜ் படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக இவரின் படங்கள் குடும்ப பின்னணியில் எடுக்கப்படுவதால் மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு வந்து கண்டு களிக்கின்றனர்.
பிரியா மோகன் ஹீரோயினாக
இந்த வகையில் கடைக்குட்டி சிங்கம் நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் வெளியாகி சக்கைப் போடு போட்டு மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது சூர்யாவின் 40வது திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். அதையே ஃபார்முலாவில் முழுக்க முழுக்க குடும்ப பின்னணியைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த திரைப்படத்தில் டாக்டர் பட நடிகை பிரியா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். சத்யராஜ்,சூரி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
முதல் முறையாக இணைகிறது
சூரரைப் போற்றுக்கு பிறகு நவரசா மற்றும் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் சூர்யா நடித்து வந்தாலும் அதற்கு முன்பாகவே சூர்யா 40 தயாராகிவிடும் என கூறப்படும் நிலையில் டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். சூர்யா 40 மூலம் முதல் முறையாக சூர்யா, டி இமான் கூட்டணி இணைகிறது.
Recommended Video
ஜூலை இரண்டாவது வாரத்தில்
சூர்யா 40 படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருவதால் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி ஜூலை இரண்டாவது வாரத்தில் சூர்யா 40 படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
சிறுத்தை சிவா - சூர்யா இணையும் படத்தை தயாரிக்கவுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம்!