செக்கச் சிவந்த வானம் படத்தில் சூர்யாவா?
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் செக்கச் சிவந்த வானம் படத்தில் சூர்யா நடித்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் செக்கச் சிவந்த வானம் படத்தில் சூர்யா நடித்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு உருவாகியிருக்கும் படம் "செக்கச் சிவந்த வானம்". லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ் இன்னும் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
படத்தின் டிரைலர் கடந்த வரம் வெளியாகி மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்தப் படப்பிடிப்பில், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிகர் சூர்யா எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதனால் இந்தப் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பாரா, இல்லை தன் மனைவி ஜோதிகாவை பார்ப்பதற்காக படப்பிடிப்பிற்கு வருகை தந்தாரா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











