Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
”மஸ்குலார் டைஸ்ட்ரோபி” நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய சூர்யா!
சென்னை: தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நடிகர் சூர்யா நிறைவேற்றியுள்ளார்.
சினிமாவை தாண்டி நல்ல எண்ணங்களை இளைஞர்களின் மனதில் விதைக்கும் முயற்சியில் தன் அப்பா சிவக்குமாரை போலவே ஈடுபட்டு வருபவர் நடிகர் சூர்யா. தன்னுடைய அகரம் பவுண்டேசன் மூலம் ஆண்டு தோறும் ஏழை மாணவ, மாணவியருக்கு கல்வி உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை அவர் நிறைவேற்றியுள்ளார். தேனி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சிறுவன் தினேஷ்குமார் படம் வரைவதில் கில்லாடி என்பதோடு தீவிர சூர்யா ரசிகன். எப்படியாவது சூர்யாவை நேரில் பார்த்து அவரை வரைய வேண்டும் என்பது சிறுவனின் ஆசையாக இருந்துள்ளது.
தினசரி வேலைகளைக் கூட செய்யவிடாமல் முடக்கும் கொடிய நோயான "மஸ்குலார் டைஸ்ட்ரோபி" எனும் தசை சிதைவு நோயால் அவதிப்பட்டு வரும் தினேஷின் குடும்பத்தாருக்கு அதை எப்படி நிறைவேற்றுவது எனத் தெரியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த தேனி மாவட்ட சூர்யா ரசிகர் மன்றத்தினர், சூர்யாவை சந்திக்க ஏற்பாடு செய்தனர்.
• Exclusive : Thalaivan @Suriya_offl 's inspiring words to his Kutty fan #DineshKumar From #Theni 🙏♥ #suriya #AltruisticSuriya @rajsekarpandian @prabhu_sr pic.twitter.com/0zCbBRrAXX
— Surya Fans Club™ (@SuriyaFansClub) September 19, 2018
சிறுவனுடனும், குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து அவர்களை சூர்யா மகிழ்வித்துள்ளார். தினேஷ்குமாரிடம் உன் அடிமனதில் எதை நினைக்கிறாயோ அது நிச்சயம் நடக்கும் என ஊக்குவித்து அனுப்பியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் சிறுவனின் மருத்துவ செலவை ஏற்பதாகவும் உறுதியளித்துள்ளார். இந்த சந்திப்பின் போது சிவகுமார் கார்த்தி ஆகியோரும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.