Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்குமா? என்பதே கேள்விக்குறி.. பாஜகவை விளாசிய ப சிதம்பரம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
”மஸ்குலார் டைஸ்ட்ரோபி” நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய சூர்யா!
சென்னை: தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நடிகர் சூர்யா நிறைவேற்றியுள்ளார்.
சினிமாவை தாண்டி நல்ல எண்ணங்களை இளைஞர்களின் மனதில் விதைக்கும் முயற்சியில் தன் அப்பா சிவக்குமாரை போலவே ஈடுபட்டு வருபவர் நடிகர் சூர்யா. தன்னுடைய அகரம் பவுண்டேசன் மூலம் ஆண்டு தோறும் ஏழை மாணவ, மாணவியருக்கு கல்வி உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை அவர் நிறைவேற்றியுள்ளார். தேனி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சிறுவன் தினேஷ்குமார் படம் வரைவதில் கில்லாடி என்பதோடு தீவிர சூர்யா ரசிகன். எப்படியாவது சூர்யாவை நேரில் பார்த்து அவரை வரைய வேண்டும் என்பது சிறுவனின் ஆசையாக இருந்துள்ளது.
தினசரி வேலைகளைக் கூட செய்யவிடாமல் முடக்கும் கொடிய நோயான "மஸ்குலார் டைஸ்ட்ரோபி" எனும் தசை சிதைவு நோயால் அவதிப்பட்டு வரும் தினேஷின் குடும்பத்தாருக்கு அதை எப்படி நிறைவேற்றுவது எனத் தெரியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த தேனி மாவட்ட சூர்யா ரசிகர் மன்றத்தினர், சூர்யாவை சந்திக்க ஏற்பாடு செய்தனர்.
• Exclusive : Thalaivan @Suriya_offl 's inspiring words to his Kutty fan #DineshKumar From #Theni 🙏♥ #suriya #AltruisticSuriya @rajsekarpandian @prabhu_sr pic.twitter.com/0zCbBRrAXX
— Surya Fans Club™ (@SuriyaFansClub) September 19, 2018
சிறுவனுடனும், குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து அவர்களை சூர்யா மகிழ்வித்துள்ளார். தினேஷ்குமாரிடம் உன் அடிமனதில் எதை நினைக்கிறாயோ அது நிச்சயம் நடக்கும் என ஊக்குவித்து அனுப்பியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் சிறுவனின் மருத்துவ செலவை ஏற்பதாகவும் உறுதியளித்துள்ளார். இந்த சந்திப்பின் போது சிவகுமார் கார்த்தி ஆகியோரும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.