Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
முதல் ஆளாக கேவி ஆனந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த சூர்யா!
சென்னை : கேவி ஆனந்தின் மறைவுக்கு முதல் ஆளாக அஞ்சலி செலுத்த அவரது வீட்டுக்கு சென்றார் சூர்யா.
Recommended Video
ஆனால், அவரது உடல் இல்லத்திற்கு வாராததால் காரில் இருந்து இறங்காமலே மருத்துவமனைக்கு சென்றார்.
கே.வி ஆனந்த் மரணம்.. அதிர்ச்சியா இருக்கு.. தமிழ்த் திரைப் பிரபலங்கள் கண்ணீர்.. இரங்கல்!
நடிகர் சூர்யா நடித்த அயன், காப்பான், மாற்றான் திரைப்படத்தை கேவி ஆனந்த் இயக்கினார்.
மாரடைப்பால் உயிரிழந்தார்
பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்கள் இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமானார். அவர் மறைந்த செய்தி திரையுலகினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
திரையுலகுக்கு பேரழிப்பு
விவேக் மற்றும் தாமிரா ஆகியோரின் அடுத்தடுத்து காலமான நிலையில் இன்று மேலும் ஒரு பிரபலம் மறைந்துள்ளது திரையுலகுக்கு பேரழிப்பு தான் என்று கூறவேண்டும். இயக்குநர் கேவி ஆனந்த் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அநேகன் இயக்கினார்
சூர்யா நடித்த அயன், காப்பான், மாற்றம், தனுஷ் நடித்த அனேகன், ஜீவா நடித்த கோ உள்ளிட்ட ஒரு சில படங்களை இயக்கி உள்ளார் . மேலும் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி உள்பட ஒரு சில படங்களை அவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் கடைசியாக நடிகர் சூர்யாவை வைத்து காப்பான் திரைப்படத்தி இயக்கி இருந்தார்.
இயக்குனர் கே.வி ஆனந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் சூர்யா அவரது இல்லம் வந்தார்.
— Suriya Fans Army™ᵂᵉᵃʳ ᴹᵃˢᵏ (Suriyafans_army) April 30, 2021
ஆனால் உடல் இன்னும் இல்லத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்ற தகவலை தொடர்ந்து காரை விட்டு இறங்காமல் மியாட் மருத்துவமனை புறப்பட்டார்.Suriya_offl #RIPKVAnand pic.twitter.com/gYElU4v8m9
முதல் ஆளாக
கேவி ஆனந்த்தின் மறைவு செய்தி கேள்விப்பட்ட நடிகர் சூர்யா முதல் ஆளாக அவரது இல்லத்திற்கு அஞ்சலி செலுத்தச் சென்றார். ஆனால், உடல் இன்னும் இல்லத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்ற கூறப்பட்டதால், காரை விட்டு இறங்காமல் மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றார்.