Don't Miss!
- News முதல்முறை வாக்களிக்க போகிறீர்களா? எப்படி வாக்களிப்பது? என்ன செய்வது? முழுமையான கைடு!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிங்கம் 3... காக்கிச் சட்டை அணியாத போலீஸ்.. ஹரியின் கதைக்கு ஓகே சொன்னார் சூர்யா!
சிங்கம், சிங்கம் 2 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சிங்கம் 3 படத்தை உருவாக்குகிறார்கள் இயக்குநர் ஹரியும் நடிகர் சூர்யாவும்.
தமிழ் சினிமாவில் வணிக ரீதியான வெற்றிப் படங்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் பெற்றவர் ஹரி. இவர் இயக்கத்தில் சூர்யா நடித்த படங்கள் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன.
இருவரும் முதலில் இணைந்த படம் ஆறு. அந்த வெற்றியைத் தொடர்ந்து வேல் படத்தில் இணைந்தனர். அந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றது.
அடுத்து சிங்கம் மற்றும் அதன் தொடர்ச்சியாக சிங்கம் 2 படங்களில் இணைந்தனர். இரு படங்களுமே வசூலில் சாதனைப் படைத்தன.
சிங்கம் 2 படத்தின் க்ளைமாக்ஸில், அடுத்த பாகத்தைத் தொடர்வதற்கு வசதியாக காட்சியமைத்திருந்தனர். இப்போது சிங்கம் 3-க்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.
இயக்குனர் ஹரி 'சிங்கம் 3' படத்திற்காக நான்கு கதைகள் தயார் செய்து அதனை சூர்யாவிடம் கொடுத்துள்ளார். அவற்றில் ஒரு கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப் போனதால், அடுத்து அந்தப் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம்.
இந்தக் கதையில் முழுக்க முழுக்க காக்கிச் சட்டை அணியாத ஒரு போலீசாக வருகிறாராம் சூர்யா.
தற்போது ஹரி, விஷால்-சுருதிஹாசன் நடிக்கும் பூஜை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்ட முடிவுசெய்துள்ளனர். அதேபோல சூர்யா, வெங்கட் பிரபுவின் மாஸ் படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் முடிந்ததும் ஹரியும் சூர்யாவும் 'சிங்கம் 3'-யைத் தொடங்கவிருக்கின்றனர்.
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!