Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சூர்யாவுக்கு பெயர் இப்படி... வில்லனுக்கு பெயர் 'உத்தமன்' #TSK
Recommended Video
சென்னை : சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கிறது 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம்.
இந்தியில் 2013-ம் ஆண்டு நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியான 'ஸ்பெஷல் 26' படத்தின் கதையை வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் உண்மைச் சம்பவத்தைத் மையமாகக் கொண்டது.
சூர்யா, இப்படத்தில் வின்டேஜ் லுக் சூர்யாவாக செம ஸ்டைலாக நடித்திருக்கிறார். அவரது ஸ்டைலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நச்சினார்க்கினியன்
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சூர்யா, 'நச்சினார்க்கினியன்' எனும் கேரக்டரில் நடித்திருக்கிறார். நச்சினார்க்கினியன் என்றால் 'நல்லவனுக்கு நல்லவன்' என்று பொருள். இதை படத்திலும் சொல்கிறார் சூர்யா. கீர்த்தி சுரேஷ் மது எனும் ரோலில் நடித்திருக்கிறார்.
போலி ரெய்டு
நச்சினார்க்கினியன், சி.பி.ஐ வேலைக்கு முயற்சி செய்து, தகுதியிருந்தும் நிராகரிக்கப்படுகிறார். பிறகு அவரே போலி சி.பி.ஐ, இன்கம்டாக்ஸ் அதிகாரியாக மாறி லஞ்ச, ஊழல் பேர்வழிகளை துரத்துவதே 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் கதை.
தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்
சூர்யாவின் கேரக்டர் பெயரான 'நச்சினார்க்கினியர்' என்பது தொல்காப்பியத்திற்கு உரையெழுதியவரின் பெயர். இவர் 14-ம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் வாழ்ந்த புலவர். இவர் கலித்தொகை, குறுந்தொகை, சீவக சிந்தாமணி, பத்துப்பாட்டு ஆகிய நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார்.
ஜான்சி ராணி
'நவரச நாயகன்' கார்த்திக் இப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரி 'குறிஞ்சி வேந்தன்' எனும் கேரக்டரில் நடித்திருக்கிறார். ரம்யா கிருஷ்ணன் அழகு மீனா எனும் கேரக்டரில் நடித்திருக்கிறார். இவர் சி.பி.ஐ அதிகாரியாக போலியாக நடிக்கும்போது, 'ஜான்சி ராணி' எனும் பெயரைப் பயன்படுத்துகிறார்.
உத்தமன்
லஞ்சம் வாங்கும் மூத்த சி.பி.ஐ அதிகாரி உத்தமனாக சுரேஷ் சந்திர மேனன் நடித்திருக்கிறார். லஞ்சம் வாங்கும் அதிகாரிக்கு உத்தமன் என சர்காஸ்டிக்காக பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சூர்யா போலி ரெய்டில் ஈடுபடும்போது உத்தமன் எனத்தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.