Don't Miss!
- News சென்னையை சுற்றி 128 ரயில் நிலையங்களில் வருகிறது சூப்பர் வசதி.. இன்னும் 3 மாதத்தில் எல்லாமே மாறுது
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இரக்கமற்ற குற்றவாளிகள்.. உங்கள் துக்கத்தில்.. ரெய்னாவுக்கு நடிகர் சூர்யா ஆறுதல்!
சென்னை: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு நடிகர் ஆறுதல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. அதிரடி பேட்ஸ்மேனான இவர், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூண்.
தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்ததும் தானும் விலகுவதாக அறிவித்தார் ரெய்னா.
கொரோனா இல்லாத கிராமத்தில் எடுக்கப்பட்ட படம்.. ரைசா வில்சனின் 'தி சேஸ்' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்நிலையில், 13-வது ஐ.பி.எல். தொடர் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் வருகிற 19 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை நடக்கிறது. இதற்காக 8 அணிகளை சேர்ந்த இந்திய வீரர்கள் அங்கு சென்றுள்ளனர். அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருக்கும் சுரேஷ் ரெய்னாவும் அங்கு சென்றிருந்தார்.
கொரோனா பாதிப்பு
இந்நிலையில், சென்னை அணியை சேர்ந்த 2 வீரர்கள் உள்பட 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட வீரர்கள், உதவியாளர்கள், வலைப்பயிற்சி பந்துவீச்சாளர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவும் இந்தியா திரும்பினார். கடந்த மாதம் 20 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் கொள்ளையர்கள் தாக்கியதில் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் உயிரிழந்தார்.
நடத்தப்பட்ட தாக்குதல்
அவரது குடும்பத்தினர் 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து, சுரேஷ் ரெய்னா போட்டியில் இருந்து விலகியதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது. ஆனால், அணி நிர்வாகம் மீதான அதிருப்தி காரணமாக சுரேஷ் ரெய்னா விலகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது உறவினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி டுவிட்டரில் எழுதியுள்ள ரெய்னா கூறியிருப்பதாவது:
போராடி வருகிறார்
பஞ்சாப்பில் என் குடும்பத்துக்கு நேர்ந்தது கொடூரமானது. என் மாமா படுகொலை செய்யப்பட்டுள்ளார். என் அத்தையும் அவர் மகன்களும் பலமாகக் காயமடைந்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக உயிருக்குப் போராடிய என் உறவினரும் மரணம் அடைந்துள்ளார். என் அத்தை இன்னும் உயிருக்குப் போராடி வருகிறார்.
கொடுமையான செயல்
அன்று என்ன நடந்தது என்பது இதுவரை எங்களுக்குத் தெரியவில்லை. இந்த வழக்கைக் கவனிக்குமாறு பஞ்சாப் காவல்துறையிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கொடுமையான செயலைச் செய்தவர்கள் யார் என்பதாவது தெரிய வேண்டும். அவர்கள் மேலும் குற்றங்கள் செய்யாமல் தடுக்கப்பட வேண்டும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இரக்கமற்ற குற்றவாளிகள்
இதையடுத்து பலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சூர்யாவும் ரெய்னாவுக்கு ஆறுதல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். இதுபற்றி ட்விட்டரில், ஆழ்ந்த இரங்கல், உங்கள் துக்கத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம். இரக்கமற்ற குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப் படவேண்டும். மன வலிமைக்காகவும் அமைதிக்காகவும் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார். இவரை போல நடிகர் துல்கர் சல்மானும் இரங்கல் தெரிவித்துள்ளார்.