Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
‘சென்னையில் ஒரு நாள்’முதல்வர் ‘ஜெ’வுக்கு பதில் நடிகர் சூர்யா!
மலையாளத்தில் வெளியான ட்ராஃபிக் படத்தை ராதிகாவின் ராடான் நிறுவனம் தமிழில் 'சென்னையில் ஒருநாள்' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளது. இப்படம் மூளைச்சாவு அடைந்த தமிழக இளைஞர் ஹிதேந்திரனின் இதயத்தை வேறொருவருக்கு தானம் செய்த உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த படத்தில் சரத்குமார், சேரன், பிரசன்னா, பார்வதி, இனியா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தில் உடல் உறுப்பு தானத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா படத்தின் இறுதியில் தோன்றி பேசினால் நன்றாக இருக்கும் என சரத்குமார் விரும்பினார். இதற்காக ஜெயலலிதாவிற்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். ஆனால் படத்தில் தோன்ற முதல்வர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து தற்போது முதல்வர் நடிக்க திட்டமிருந்த வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.இதில் நடிகர் சூர்யாவாகவே படத்தில் தோன்றி உடல்தானத்தைப் பற்றி சொல்லும் விஷயங்கள் கடைசி 15 நிமிடங்கள் பேசுகிறாராம். இதுவும் படத்தை நகர்த்தி செல்வதாக அமைந்து இருக்கும் என சரத்குமார் தெரிவித்தார்.
ஆனால் மலையாலத்தில் வெளியான ட்ராஃபிக்கில் நடிகர் பேசும் காட்சி எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.