Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கவுதம் மேனனிடம் வாங்கிய அட்வான்ஸைத்தான் திருப்பித் தந்தேன்- சூர்யா விளக்கம்!
கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடிப்பதாக இருந்தார் சூர்யா. ஆனால் கதை விஷயத்தில் அவருக்கும் கவுதம் மேனனுக்கும் ஒத்துப் போகாததால், படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சூர்யா சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.
இந்த நிலையில் கவுதம் மேனனிடம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தந்துவிட்டார். ஆனால் அவர் அட்வான்ஸ் தொகையுடன் கூடுதலாக பெரும் தொகையைத் தந்ததாக வெளியில் தகவல் பரவியது.
இதனையறிந்த சூர்யா தரப்பு, "வாங்கிய முன்பணத்தைத் தந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சூர்யா, கவுதம் மேனனை வீட்டுக்கே வரவழைத்து அந்தத் தொகையை முழுவதுமாகக் கொடுத்துவிட்டார். இத்தனைக்கும் கவுதம் மேனனுக்காக காத்திருந்ததில் அவருக்கு பல கோடி ரூபாய் இழப்புதான்.
ஆனால் அட்வான்ஸ் தொகைக்கு மேல் கூடுதலாக அவர் 5 கோடி கொடுத்ததாக வந்த செய்திகளில் உண்மையில்லை. அதுபோன்ற பொய்யான பெருமைகளை சூர்யா என்றுமே விரும்பியதுமில்லை. உண்மை வெளியில் தெரிந்தால் போதும்," என்றார்கள்.