Don't Miss!
- Sports எத்தனை விக்கெட் போனாலும் சரி.. கதறவிட்ட குஜராத் டைட்டன்ஸ்.. கதிகலங்கிப் போன டெல்லி கேபிடல்ஸ்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தரம்தாழ்ந்த விமர்சனங்களைக் கண்டுக்காதீங்க! - ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ்
Recommended Video
சென்னை: தரம்தாழ்ந்த விமர்சனங்களைக் கண்டு கொள்ள வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் நடிகர் சூர்யா.
நடிகர் சூர்யாவின் உருவத் தோற்றத்தை விமர்சிக்கும் வகையில் சில தினங்களுக்கு முன் சன் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பேசியிருந்தனர். இதற்கு உடனடியாக தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா மற்றும் எஸ் ஆர் பிரபு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சூர்யாவின் ரசிகர்கள் பலர் சென்னையில் உள்ள சன் டிவி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
ஆனால் சூர்யாவோ தன் ரசிகர்களை கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் இப்படி எழுதியுள்ளார்:
"தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும் சக்தியையும் பயனுள்ள செயல்களுக்குச் செலவிடுங்கள், சமூகம் பயன்பெற.. நன்றி அன்பான ரசிகர்களே!" என்று குறிப்பிட்டுள்ளார்.