Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜல்லிக்கட்டு விவகாரம்... மீணடும் தள்ளிப் போனது சூர்யாவின் 'சி 3'!
சூர்யா நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'சி 3' படம் வெளியாவது மீண்டும் தள்ளிப் போய்விட்டது.
இந்தப் படம் சில மாதங்களுக்கு முன்பே அனைத்து வேலைகளும் முடிந்து, சென்சாராகி வெளியீட்டுக்கு தயாராகயுள்ளது. ஆனால் பல காரணங்களாக தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டுள்ளது.
'சிங்கம்' படத்தின் தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தை ஹரி இயக்கியிருக்கிறார். ஸ்ருதிஹாசன், அனுஷ்கா, விவேக், சூரி, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம், இந்த மாதம் குடியரசுத் தினத்தன்று வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக போராடி வந்தனர்.
போராட்டங்கள் முடிவுக்கு வந்தாலும் இயல்பு நிலை திரும்பாததால் படம் வெளியிடுவதை தள்ளி வைப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநேகமாக பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது.