Don't Miss!
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஜீவி பிரகாஷின் குரலில் மயங்கிய சூர்யா.. டிரெண்டாகும் வீடியோ!
Recommended Video
சென்னை : சூரரைப்போற்று படத்தில் வெய்யோன் சில்லி என்ற பாடல் பறக்கும் விமானத்தில் வெளியிடப்பட்டது. அந்த காணொலி தற்போது வெளியாகி உள்ளது. அதில் சூர்யா மிகுந்த புன்னகையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் தான் சூரரைப் போற்று. இந்த படத்தை இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி வருகிறார். படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார். படத்தை சூர்யாவே தனது 2டி எண்டர்டெய்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறார். நேற்று முன்தினம் படத்தின் இரண்டாம் பாடலான வெய்யோன் சில்லி பாடல் இதுவரை இந்திய சினிமாவில் நடக்காத முறையில் வெளியிடப்பட்டது.
இதனை மொத்த திரையுலகமே ஆச்சரியத்துடன் திரும்பி பார்த்தது என்றே சொல்லலாம். இந்த பாடல் பறக்கும் விமானத்தில் வெளியிடப்பட்டது. இதில் படக்குழுவுடன் நூறு அரசுப்பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர் .
அதுக்கு அவர் செட் ஆக மாட்டாரு.. ஹீரோ மாத்துனா படம் பண்ணலாம்.. உடனடியாக ஓகே சொன்ன டைரக்டர்!
இந்த பாடல் வெளியிடும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் ஜீவி.பிரகாஷ் விமானத்தில் இருக்கும் சேட்டிலைட் போனில் அவரின் குரலில் முதல் பாடலை பதிவு செய்கிறார் .
இதை முன் இருக்கையில் அமர்ந்த படி இருக்கும் சூர்யா மிக ஆர்வத்துடனும் மிக புன்னகையுடனும் ரசித்த படி அப்படியே அமர்ந்திருக்கும் குழந்தைகளை திரும்பி பார்க்கிறார். சிலருக்கு சில விசயங்களில் மன நிறைவு கிடைக்கும் அப்படி குழந்தைகளின் ஆனந்ததை பார்த்து மனம் மகிழ்ந்த சூர்யாவின் புன்னகையை பதிவு செய்த அந்த காணொலியை அதிகபடியான ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்
சூர்யா தனது அகரம் குழுமத்தின் மூலம் பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். அவர்களுக்கு கொஞ்ச நாள் முன்பு ஒரு போட்டி வைத்து அந்த போட்டியில் தேர்வாகிய நூறு பேரை தனது சொந்த செலவில் முதல் முறையாக விமானத்தில் ஏற்றி தனது படத்தின் பாடல் வெளியீட்டிலும் பங்கு கொள்ள வைத்துள்ளார் .
ஒரு உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது சூரரைப்போற்று படம். மிக பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம் வரும் கோடை விடுமுறையில் திரையரங்கை கலக்க உள்ளது. இந்த படத்திற்கு பிறகு சூர்யா வெற்றிமாறனுடன் கைகோர்க்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கும் ஜீவி.பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ் தாணு படத்தை தயாரிக்கிறார்.