Don't Miss!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- News சேலத்தில் மோடி.. அதிமுக சார்பில் பேசிய ஓ.பன்னீர் செல்வம்.. அழைப்பு விடுத்த கே.பி. ராமலிங்கம்
- Automobiles வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஒரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
ஜீவி பிரகாஷின் குரலில் மயங்கிய சூர்யா.. டிரெண்டாகும் வீடியோ!
Recommended Video
சென்னை : சூரரைப்போற்று படத்தில் வெய்யோன் சில்லி என்ற பாடல் பறக்கும் விமானத்தில் வெளியிடப்பட்டது. அந்த காணொலி தற்போது வெளியாகி உள்ளது. அதில் சூர்யா மிகுந்த புன்னகையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் தான் சூரரைப் போற்று. இந்த படத்தை இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி வருகிறார். படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார். படத்தை சூர்யாவே தனது 2டி எண்டர்டெய்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறார். நேற்று முன்தினம் படத்தின் இரண்டாம் பாடலான வெய்யோன் சில்லி பாடல் இதுவரை இந்திய சினிமாவில் நடக்காத முறையில் வெளியிடப்பட்டது.
இதனை மொத்த திரையுலகமே ஆச்சரியத்துடன் திரும்பி பார்த்தது என்றே சொல்லலாம். இந்த பாடல் பறக்கும் விமானத்தில் வெளியிடப்பட்டது. இதில் படக்குழுவுடன் நூறு அரசுப்பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர் .
அதுக்கு அவர் செட் ஆக மாட்டாரு.. ஹீரோ மாத்துனா படம் பண்ணலாம்.. உடனடியாக ஓகே சொன்ன டைரக்டர்!
இந்த பாடல் வெளியிடும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் ஜீவி.பிரகாஷ் விமானத்தில் இருக்கும் சேட்டிலைட் போனில் அவரின் குரலில் முதல் பாடலை பதிவு செய்கிறார் .
இதை முன் இருக்கையில் அமர்ந்த படி இருக்கும் சூர்யா மிக ஆர்வத்துடனும் மிக புன்னகையுடனும் ரசித்த படி அப்படியே அமர்ந்திருக்கும் குழந்தைகளை திரும்பி பார்க்கிறார். சிலருக்கு சில விசயங்களில் மன நிறைவு கிடைக்கும் அப்படி குழந்தைகளின் ஆனந்ததை பார்த்து மனம் மகிழ்ந்த சூர்யாவின் புன்னகையை பதிவு செய்த அந்த காணொலியை அதிகபடியான ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்
சூர்யா தனது அகரம் குழுமத்தின் மூலம் பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். அவர்களுக்கு கொஞ்ச நாள் முன்பு ஒரு போட்டி வைத்து அந்த போட்டியில் தேர்வாகிய நூறு பேரை தனது சொந்த செலவில் முதல் முறையாக விமானத்தில் ஏற்றி தனது படத்தின் பாடல் வெளியீட்டிலும் பங்கு கொள்ள வைத்துள்ளார் .
ஒரு உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது சூரரைப்போற்று படம். மிக பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம் வரும் கோடை விடுமுறையில் திரையரங்கை கலக்க உள்ளது. இந்த படத்திற்கு பிறகு சூர்யா வெற்றிமாறனுடன் கைகோர்க்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கும் ஜீவி.பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ் தாணு படத்தை தயாரிக்கிறார்.