twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரெட்டை வேடத்தில் கலக்க தயாராகும் சூர்யா.. வாடிவாசல் சூட்டிங் எப்ப தெரியுமா?

    |

    சென்னை : நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சூர்யா 41 படத்தில் நடித்து வந்தார்.

    பாலா இயக்கத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இணைந்த இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து இயக்குநர் சிவா டைரக்ஷனில் தற்போது தன்னுடைய சூர்யா 42 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார்.

    அஞ்சாத பழுவேட்டையர்கள்… அதிரடியாக களமிறக்கிய பொன்னியின் செல்வன் டீம்: மிரட்டலான லேட்டஸ்ட் அப்டேட்அஞ்சாத பழுவேட்டையர்கள்… அதிரடியாக களமிறக்கிய பொன்னியின் செல்வன் டீம்: மிரட்டலான லேட்டஸ்ட் அப்டேட்

    நடிகர் சூர்யா

    நடிகர் சூர்யா

    நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் என்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், விக்ரம் படத்தில் அவரது ரோலக்ஸ் கேரக்டர் ரசிகர்களை மிரட்டியது. இந்தப் படத்தின் அடுத்த பாகம் சூர்யாவை மையப்படுத்தி உருவாக உள்ளது.

    விக்ரம் 3 படம்

    விக்ரம் 3 படம்

    இந்தப் படத்தின் அறிவிப்பிற்காக தற்போது ரசிகர்கள் வெயிட்டிங். முன்னதாக லோகேஷ் தளபதி 67 மற்றும் கைதி 2 படங்களை இயக்கவுள்ளதாகவும் அதன் பின்பே விக்ரம் 3 படத்தின் மேக்கிங் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

    சூர்யா -சிவா காம்பினேஷன்

    சூர்யா -சிவா காம்பினேஷன்

    இந்தப் படம் பீரியட் படமாக உருவாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னையில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. சில தினங்களில் படக்குழு கோவாவிற்கு அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக சூர்யா 41 படத்தின் சூட்டிங்கில் மும்முரமாக நடித்துவந்தார் சூர்யா.

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வணங்கான் படம்

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வணங்கான் படம்

    18 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் பாலாவுடன் இணைந்து அவர் நடித்த இந்தப் படத்திற்கு வணங்கான் என்று பெயர் வைத்தாலும் வைத்தார். பாலாவின் உத்தரவுகளுக்கு வணங்காமல் தற்போது சூட்டிங்கை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கன்னியாகுமரியில் 35 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    முன்னதாக துவங்கிய சூர்யா 42

    முன்னதாக துவங்கிய சூர்யா 42

    வணங்கான் படத்தை தொடர்ந்து வாடிவாசல் படத்திலும் அதன்பிறகே சிவா இயக்கத்திலும் சூர்யா இணையவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே வணங்கான் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால் அவர் தற்போது சிவா இயக்கத்தில் உடனடியாக இணைந்துள்ளார். வெற்றிமாறன் விடுதலை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளதால் அவரால் உடனடியாக வாடிவாசல் படத்தில் இணைய முடியவில்லை.

    டிசம்பரில் வாடிவாசல் சூட்டிங்

    டிசம்பரில் வாடிவாசல் சூட்டிங்

    இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் வரும் டிசம்பரில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தப் படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளன. படம் 2024ம் ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஜல்லிக்கட்டு பயிற்சி

    ஜல்லிக்கட்டு பயிற்சி

    இதனிடையே இந்தப் படத்தில் நடிப்பதற்காக சூர்யா ஜல்லிக்கட்டு காளைகள் இரண்டை வாங்கி பயிற்சி பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் டெஸ்ட் சூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட நிலையில், அதன் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Surya -Vetrimaaran combination movie Vaadi vaasal shooting to be starts on december 2022
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X