Don't Miss!
- News அரசு பள்ளியில் அசிங்கமா சிக்கிய சங்கீதா டீச்சர்.. பியூட்டிஷியனுடன் கிச்சனில்.. போலீசுக்கு போன வீடியோ
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மீண்டும் இணையும் 'மாஸ்' கூட்டணி?
வெங்கட் பிரபு-சூர்யா கூட்டணியில் கடந்தாண்டு வெளியான 'மாஸ்' சூர்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த மாஸை ஒரேயடியாக சரித்து விட்டது.
தட்டுத்தடுமாறி தற்போதுதான் அந்தத் தோல்வியில் இருந்து சூர்யா மீண்டு வருகிறார். இந்நிலையில் மீண்டும் இந்தக் கூட்டணி இணையப் போவதாக வெளியான தகவல்கள் கோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
உண்மையிலேயே சூர்யா, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா? என விசாரித்தால் நடிப்பது உண்மைதான். ஆனால் முழுநீள ஹீரோவாக இல்லை என்று கூறுகின்றனர்.
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் 'சென்னை 28' படத்தின் 2 வது பாகத்தில், சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.
இதுகுறித்து சூர்யாவின் கதாபாத்திரம் படத்தின் திருப்புமுனைக் காட்சியாக அமையும் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் பாகம் போலவே 2 வது பாகத்தையும் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.முக்கால்வாசி படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் இறுதிக்கட்ட காட்சிகளை தேனியில் படம்பிடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.