சூர்யாவின் வாடிவாசல் படம் குறித்து வெளியான அப்டேட்… உற்சாகத்தில் ரசிகர்கள் !
சென்னை : சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படம் முடிந்த பிறகு, செப்டம்பரில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ் திரைப்படம்
தனுஷ் இளைஞராகவும், வயதான தோற்றம் என இரண்டு வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய திரைப்படம் தான் அசுரன். இப்படத்தில் மஞ்சு வாரியர் பச்சையம்மாள் கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.

விடுதலை
நகைச்சுவை நடிகராக இருந்த சூரி, விடுதலை படத்தில் மூலம் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இதற்காக, கடுமையாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் வைத்து தனது உடலைமைப்பை கச்சிதமாக மாற்றியிருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதில், சூரி கான்ஸ்டபில் கெட்டப்பிலும், விஜய்சேதுபதி கைதி கெட்டப்பிலும் இருந்தனர்.

செப்டம்பரில் படப்பிடிப்பு
விடுதலை படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தையும் இயக்குனர் வெற்றிமாறன் உருவாக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகி உள்ளது.

அதிகாரம்
இயக்குனர் வெற்றிமாறன், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் அதிகாரம் திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுத உள்ளார். இப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இப்படத்தை துரைசெந்தில் இயக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











