Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
’படத்தில் கருத்து இருக்கும்.. ஆனால் கசப்பாக இருக்காது’ ஜீனியஸ் படம் பற்றி இயக்குனர் சுசீந்திரன்!
ஜீனியஸ் படத்தில் முக்கியமான கருத்து இருக்கும் என சுசீந்திரன் தெரிவித்துள்ளார்
சென்னை: ஜீனியஸ் திரைப்படத்தில் முக்கியமான மெஸ்சேஜ் இருக்கும் என சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ரோஷன், பிரியா லால், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ஜீனியஸ். இப்படம் நாளை வெளியாக உள்ளது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜீனியஸ் திரைப்படம் குறித்து பல விஷயங்களை இயக்குனர் சுசீந்திரன் பகிர்ந்துள்ளார்.
இப்படத்தில் ரோஷன் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு அப்பாவாக ஆடுகளம் நரேன் நடித்திருக்கிறார். அவருக்கு இப்படத்தில் மூன்று தோற்றங்கள் உள்ளன. ஜீனியஸ் படத்தின் கதாபாத்திரத்திற்கு ரோஷன் மிகச்சரியான ஆள். கதாநாயகியாக பிரியா லால் நடித்துள்ளார்.
என்னுடைய எல்லா படத்திலும் சமுகக் கருத்துகள் இருப்பது போல், இப்படத்திலும் உள்ளது. கல்வியால் ஏற்படும் அழுத்தத்தை மாணவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதுதான் முக்கியமான விஷயமாக இருக்கும். காலை எழுந்தவுடன் படிப்பு என பாரதியார் சொன்னார். ஆனால் இன்று நிறைய குழந்தைகள் மாலை நேரத்தில்தான் படிக்க துவங்குகிறார்கள்.
அவர்கள் வளர்ந்து வேலைக்குச் சென்ற பிறகு வேறுவிதமான அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். எடுத்துகாட்டாக சொல்லவேண்டுமென்றால், ஐடியில் துறை இளைஞர்கள், வாரம் முழுவதும் வேலை செய்துவிட்டு, வார இறுதியில் தூங்குவார்கள். அவர்களால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாமல் போகும். அதனால் ஒருவகை மன அழுத்தம் உண்டாகும்.
டார்கெட் முடிக்க வேண்டும், பிரசண்டேஷன் கொடுக்கவேண்டும் போன்ற விஷயங்களால் மன அழுத்தத்திற்க்கு ஆளாகுபவர்களைப் பார்த்திருக்கிறேன். இதுபோன்ற விஷயங்களை பேசும் படமாக ஜீனியஸ் இருக்கும்.
மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தன்னிலை இழக்கும் ஒருவன், இந்த சமூகத்தை எப்படி அணுகுகிறான் என்பதுதான் கதை. இப்படத்தில் தேவையான கருத்து இருக்கும் ஆனால் கசப்பாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். ஜீனியஸ் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார், ஆர்.பி.கௌரவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.