Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ராஜபாட்டை படத்தை எடுத்து தவறு செய்துவிட்டேன்: சுசீந்திரன்
சென்னை: ராஜபாட்டை என்னும் படத்தை எடுத்து தவறு செய்துவிட்டதாக இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
வெண்ணிலா கபடுக் குழு மூலம் இயக்குனர் ஆனவர் சுசீந்திரன். நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு உள்ளிட்ட படங்களை இயக்கியவர். விஷ்ணு விஷாலை வைத்து அவர் இயக்கியுள்ள மாவீரன் கிட்டு நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திரையுலகம் பற்றி சுசீந்திரன் கூறுகையில்,
வெண்ணிலா கபடிக்குழு
நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட நல்ல படங்களை இயக்கியுள்ளேன். ஆனால் என் முதல் படமான வெண்ணிலா கபடிக்குழு தான் வெற்றியை பெற்றுத் தந்தது.
முன்னணி ஹீரோக்கள்
நான் முன்னணி ஹீரோக்கள் அல்லது மாஸ் ஹீரோக்களை வைத்து படம் பண்ணுவது இல்லை. ஏனென்றால் என்னிடம் அவர்களுக்கு ஏற்ற கதை இல்லை.
ராஜபாட்டை
நான் ஏற்கனவே ராஜபாட்டை என்னும் படத்தை இயக்கி தவறு செய்துவிட்டேன். அதற்கான விலையையும் கொடுத்துவிட்டேன். அந்த படத்திற்கு பிறகு யாருமே என்னை கண்டுகொள்ளவில்லை.
புதுமுகங்கள்
ராஜபாட்டை படத் தோல்வியால் கவலை அடைந்த தான் என்னை தேற்றிக் கொண்டு புதுமுகங்களை வைத்து படம் எடுத்து ரசிகர்களின் மனதை மீண்டும் கவர்ந்தேன்.